யாழில் தீயினால் இரு குடும்பப் பெண்கள் மரணம்!!

யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்பவர் கடந்த 08ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரிய பணியில் இருந்து Read More

Read more

அல்வாயில் பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்த முயற்சி!!

பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போதே 4 வயது சிறுமியை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்கம் பேத்தியாருடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தார். சிறுமியும் சிறுமியின் சகோதரனும் அருகே உறங்கிக் கொண்டிருந்தார்கள்.   இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை(06/06/2022) நள்ளிரவு 12 மணி அளவில் சிறுமியை Read More

Read more

வதிரியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு….. வயோதிபப் பெண் தாக்கப்பட்டு கொலை!!

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் போதே தாக்குதலுக்கு இலக்காகி 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது  தலையில் தாக்கப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். வழங்கப்பட்ட Read More

Read more

மாலுசந்தியில் ஆட்டோ – மோ. சைக்கிள் விபத்து….. 3 மாணவிகள் உட்பட 5 பேர் படுகாயம்!!

வடமராட்சி மாலுசந்தி வீதியில் நாய்கள் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ, மோட்டார் சையிக்கிள் விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி மாலுசந்தி வீதியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் 3 மாணவிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் , மாலுசந்தியில் இருந்து மந்திகை நோக்கி சென்ற ஆட்டோ தனியார் கல்வி நிலையம் தாண்டி சிறிது தூரத்தில் நாய்கள் கூட்டம் Read More

Read more

விக்னேஸ்வரா கல்லூரி வீதி நீர் வடிகால் சம்பந்தமான கூட்டம் இன்று!!

நாளைய தினம் நடைபெறவுள்ள கரவெட்டி விக்னேஸ்வரா வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியை நீர் வடிகால் செய்யாமல் புனரமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. நீர் வடிகால் செய்யாமல் வீதி அபிவிருத்தி நடைபெற்றால் நெல்லியடி பிரதான வீதியால் வரும் வெள்ளம் முதல் அனைத்து வெள்ள நீரும் கரவெட்டி இராஜ கிராமம் மற்றும் மத்தொணி கிராமங்கள் உட்பட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகும் Read More

Read more

எதிர்வரும் வாரம் முதல் வடக்கின் பலபகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனகனமழை வரை கிடைக்கும் வாய்ப்பு….. மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பின்னர் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா ( Nagamuthu Pradeeparaja) எதிர்வு கூறியுள்ளார். இதன் காரணமாக, எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 03.03.2022 வியாழக்கிழமை, 04.03.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 05.03.2022 சனிக்கிழமை ஆகிய நாட்களில் வடக்கு Read More

Read more

மோ. சையிக்கிள் – டிப்பர் விபத்து – இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி….. வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக சம்பவம்!!

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  

Read more

நெல்லியடி, கரணவாய் மேற்கு பகுதியில்….. 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் மேற்கு, அந்திரான் பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நேற்றிரவு (23) குறித்த சம்பவமானது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Read more

தனக்கு தானே தீ வைத்த கர்ப்பிணி பெண்….. வடமராட்சி மண்டானில் சம்பவம்!!

வடமராடசியில் உள்ள மண்டன் என்னும் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீவுப்பகுதியை சேர்ந்த குறித்த பெண்  மண்டான் பகுதியில்  அமைந்துள்ள தனது கணவரின் வீட்டிற்கு வருகைதந்து அங்கே ஏற்படட பிரச்னை காரணமாக, காலை 11.00 மணியளவில் வீட்டில் இருந்த மண்ணெய்யை தன்மேல் ஊற்றி வயிற்றில் கருவுடன் இருந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

காதலனை நம்பி வீட்டைவிட்டு சென்ற யுவதி கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குளாளகியுள்ளதாக முறைப்பாடு….. நெல்லியடியில் சம்பவம்!!

யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற யுவதி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குளாளகியுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட யுவதியே நேற்றைய தினம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும்18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். தொலைபேசிக்கு கடந்த சில Read More

Read more