#Death

FEATUREDLatestNewsTOP STORIES

பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்த பாடசாலை சிறுமி!!

தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(22/05/2024) காலை புதிய கருவாத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. மல்கொல்ல – படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த துரதிஷ்டவசமான விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மாணவி புதிய கருவாத்தோட்டம் பிராந்திய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து….. ஆபத்தான நிலையில் 36 மாணவர்கள்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29/02/2024) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று(29/02/2024) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மன்னாரில் 13 வயது சிறுமி காணாமல் போய் கண்டுபிடித்து ஒரு நாளில்….. தவறான முடிவெடுத்து மரணித்த சோகம்!!

மன்னாரில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பிரதான வீதி,எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று திங்கட்கிழமை(12/02 /2024) அதிகாலை அவரது வீட்டில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் வவுனியாவில் இருந்து மீட்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11/02/2024) வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் குறித்த துயர சம்பவம் இடம் பெற்றுள்ளமை தெரிய வருகிறது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திடீர் சுகவீனதிதால் மரணமடைந்த யாழ் பல்கலை மாணவி….. கண்ணீர் மல்க இறுதி யாத்திரைக்கு அனுப்பிவைத்த உறவுகள்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, சாயுடை  பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம்(25/12/2023) அவரது இல்லத்தில் நடைபெற்று மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. அவரது இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர், நண்பிகள் , ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மனைவியை அடித்து கொன்றுவிட்டு….. தானும் துக்கிட்டு உயிரை மாய்த்த கணவன்!!

களுத்துறை மாவட்டம் அளுத்கம – தன்வத்தகொட பகுதியில் மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம்(04/11/2023) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில் கணவன் அடித்துள்ளார். இதனால், பலத்த காயம் அடைந்த மனைவி கீழே விழுந்ததையடுத்து கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், விசாரணையில் இருவரும் நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் முரண்பட்டு வந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNews

கிளிநொச்சி கோனாவில் பகுதியில் நடந்த கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பலி

கிளிநொச்சி கோனாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இருசக்கர உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த கைதி!!

புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் ஆணொருவர் துணியால் ஜன்னலில் கட்டி தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று(5) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்று(5) நீதிமன்றம் வழக்கிற்கு கொண்டுவரப்பட்டு புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் கப்புஹேன கனேமுல்ல Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு – உயிரிழந்தும் 07 பேராக வாழும் மாணவி….. வெளியாகிய பெறுபேறுகளில் அதிவிசேட சித்திகள்!!

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3A  பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தருக்கு நிகழ்த்த சோகம்!!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த நபர் ஒருவர் இன்றைய தினம் (28/08/2023) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்ற 57 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நாளாந்தம் பெருமளவான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்துதல், அங்கப்பிரதட்சணை எடுத்தல் போன்ற தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்றையதினமும்(28/08/2023) Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கதவுகள் பூட்டப்பட்ட புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு விபத்து….. பேர் உடல்கருகி பலி!!

இந்தியாவின் மதுரை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IRCDC சுற்றுலா புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது. இன்று(26/08/2023) அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு தீயணைப்பு படையினர் விரைவில் வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புகையிரத பெட்டியில் 60 பேர் இருந்ததாகவும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் யாரும் வெளியே செல்ல முடியாமல் தீயில் சிக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. .

Read More