59 வயதில் உலக சாதனை படைத்த யாழ் தமிழர்!!

7நிமிடம் 48செக்கன்களில் 1550KG எடை கொண்ட ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(09/07/2023) பிற்பகல் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற உலக சாதனை நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்து சாதனை நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி Read More

Read more

தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய 19 வயது மாணவி….. யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பாசையூரில் மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த 19 வயது நிறைந்த லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சானுயா என்பவர் தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், கோபமடைந்த குறித்த பெண் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன் கிழமை(12/07/2023) அன்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16/07/2023) சிகிச்சை Read More

Read more

ஊர்காவல்துறையில் 9 வயது மாணவிக்கு அதிபரால் நடந்த கொடுமை….. அதிபர் கைது – மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!!

யாழ் – தீவக வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிபரை ஊர்காவல்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாடசாலையில் வைத்து அதிபர் மாணவியை கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஊர்காவல்துறை காவல்துறையினர் நேற்று(16/07/2023) ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அதிபரை இன்று(17/07/2023) திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக Read More

Read more

முல்லைத்தீவு – பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்….. நால்வர் கைது!!

முல்லைத்தீவு – மல்லாவி, பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த (10/07/2023)அன்று பாலிநகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். வீடொன்றினுள் நுழைந்து சரமாரி துப்பாக்கிச் சூடு – பறிபோனது 23 வயது இளைஞரின் உயிர்….. முல்லைதீவில் சம்பவம்!! – Pasanga FM இதனை தொடர்ந்து, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் Read More

Read more

சமகால அரசியல் சூழ்நிலைகளை உள்ளடக்கி கலந்துரையாடல்களுக்கு திட்டம்!!

சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மாகாண கலந்துரையாடல் 08/07/2023 அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 14.00 மணி வரை கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ARR வணிக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண கலந்துரையாடல் 09/07/2023 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மட்டகளப்பில் உள்ள east lagoon விடுதியில் இடம்பெறவுள்ளது. Read More

Read more

யாழில் பட்டப்பகலில் பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய….. 18, 20, 23 மற்றும் 24 வயது இளைஞர்கள் கைது!!

யாழ் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ் . மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

Read more

100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி….. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது Read More

Read more

குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் சென்ற குறித்த இழுவை படகு விபத்து!!

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.   இந்த சம்பவம் இன்று இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.   புங்குடுதீவு – குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற குறித்த இழுவை படகு நெடுந்தீவின் இறங்குதுறைக்கு அருகில் கடலில் ஏற்பட்ட அலையின் காரணமாக படகின் அடிப்பகுதி தரைப்பகுதியில் மோதியுள்ளது. இதனால், படகின் அடிப்பகுதியில் துளை உண்டாக, உள்ளே தண்ணீர் கசிவு ஏற்பட்டு Read More

Read more

யாழில் முற்றிலும் இலவசமாக சகல வசதிகளுடன் 18 வீடுகளைக் கட்டி….. கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வழங்கி வைத்த பிரபல தொழிலதிப‌ர்!!

‘இராஜேஸ்வரி திருமண மண்டபம்‘ என்றால் யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் உரிமையாளரும் வர்த்தகருமான செல்லத்துரை திருமாறன் பல்வேறு சமூகசேவைகளையும் ஆற்றி வருகிறார். அதன் ஒரு கட்டமாக புன்னாலைக்கட்டுவன் அச்செழு பகுதியில் 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். தனது தாயாரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலமாக வீடுகள் இன்றிக் கஷ்டப்படும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்கியிருக்கிறார்.   “குறித்த 18 குடும்பங்களையும் எப்படித் தேர்வு செய்தீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,   ‘எமக்கு Read More

Read more

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூரான் மகோற்சவம்….. புதிய நடைமுறைகள் வெளியீடு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது. மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(26/07/2022) காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் Read More

Read more