தவறான முறையில் செயற்படும் மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்….. நிர்வாகத்தை மாற்ற கோரி உறுப்பினர்கள் கையெழுத்துடன் மனு!!

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் தவறான முறையில் நிர்வாக செயல்பாடுகளை பயன்படுத்தி வருவதாக அச்சங்கத்தின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கோரி குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் எழுத்து மூலம் இன்று(06/09/2022) செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் நிர்வாக செயல்பாடுகளை தவறான Read More

Read more

எரிபொருள் கப்பல் வருகை தெடர்பாக மகிழ்ச்சியான செய்தி!!

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, பெரும்பாலும் 15 ஆம் அல்லது 16 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால் இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

திடீரென தீப்பற்றியெரிந்தது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றியெரிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரதநிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டிருந்தது. குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

மாலுசந்தியில் ஆட்டோ – மோ. சைக்கிள் விபத்து….. 3 மாணவிகள் உட்பட 5 பேர் படுகாயம்!!

வடமராட்சி மாலுசந்தி வீதியில் நாய்கள் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ, மோட்டார் சையிக்கிள் விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி மாலுசந்தி வீதியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் 3 மாணவிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் , மாலுசந்தியில் இருந்து மந்திகை நோக்கி சென்ற ஆட்டோ தனியார் கல்வி நிலையம் தாண்டி சிறிது தூரத்தில் நாய்கள் கூட்டம் Read More

Read more

தானே முச்சக்கர வண்டியை ஓட்டிச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா….. காரணம் என்ன!!

நாட்டில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஆடம்பர வாகனங்களை பயன்படுத்த முடியாது எனக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தானே முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். பொருளாதார கஷ்டங்கள் காரணமாக முச்சக்கர வண்டியில் பயணிப்பதிலும் மக்களுக்கு சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஹர்ச டி சில்வா ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார். எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தொடர்ந்தும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்வாரா Read More

Read more

அதிகரிக்கும் ஆட்டோ கட்டணம்!!

நாட்டில் நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன (Lalith Dharmasena) தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகபட்சமாக 80 ரூபாவினாலும் இரண்டாவது கிலோமீற்றரில் இருந்து அறவிடும் கட்டணத்தை 45 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Read more

வடமாகாண A9 வீதிகளில் இனி வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை????

வடக்கு மாகாணத்தில் A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவினால் (Senior DIG Jagath Palihakkara) இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) உதவியுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை இனங்கண்டு, இது தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இப்பணியை முறையாக மேற்கொள்ள பொலிஸ் Read More

Read more

யாழ் – காரைநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

2022 ஜனவரி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்த வேண்டும்!!

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொத்தும் சட்டத்தை அடுத்த வருடம் (2022) முதல் மீண்டும் செயற்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு 2018 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அந்த திட்டம் செயற்படுத்தப்படாததால் மாகாண மட்டத்தில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 15ஆம் திகதி வரை அனைத்து முச்சக்கர வண்டி மீற்றர்களையும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இல்லாத முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட Read More

Read more

முச்சக்கர வண்டி தடம்புரண்டு விபத்து!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சவிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றின் மீது, மட்டக்களப்பு பக்கமிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை Read More

Read more