11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை அதிபர் கைது!!

மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்தேகநபரான 50 வயதுடைய அதிபர் பலாங்கொட, அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் இன்று(05/03/2023) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Read More

Read more

19KG கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறை….. கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!!

19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 30 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் தற்போது 11 கிலோ கஞ்சாவை மட்டுமே காவல்துறையினர் நீதிமன்றில் ஒப்படைத்தனர். இது குறித்து எழுத்துபூர்வமாக காவல்துறையினர் தெரிவித்தபோது பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. பழுதடைந்த கட்டடம் Read More

Read more

மகிந்தவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது!!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மே 9 காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more

வதிரியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு….. வயோதிபப் பெண் தாக்கப்பட்டு கொலை!!

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் போதே தாக்குதலுக்கு இலக்காகி 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது  தலையில் தாக்கப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். வழங்கப்பட்ட Read More

Read more

மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை சூறையாடிய 21 வயது பெண்!!

வவுனியாவில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த சோடாவை கொடுத்து அவர் மயங்கியதும் அவரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் மூதாட்டி சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண் வைத்தியசாலையில் இளைப்பாறிய வேளை அங்கு வந்த யுவதி ஒருவர் Read More

Read more

தென்னிலங்கையில் வெடித்த கலவரம்….. 7 பேர் உயிரிழப்பு – வெளிவரும் பகீர் தகவல்கள்!!

நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   Read More

Read more

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவி என என கூறப்பட்ட போலி அடையாள அடடையுடன் யுவதி ஒருவர் கைது!!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி என தெரிவித்த போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து அது தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் பிரகாரம் குறித்த Read More

Read more

நீர்வேலியில் தனியார் பேருந்தை வழிமறித்து சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு ம‌ர்ம கு‌ம்ப‌ல் தப்பியோட்டம்!!

நீர்வேலியில், பேருந்து சாரதி ஒருவரின் மூக்கை நபர் ஒருவர் வெட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நேற்று தனியார் பேருந்தை வழிமறித்த நபரொருவரே சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.   அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை Read More

Read more

18 வயது மாணவி நடு வீதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை!!

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவி கொலைசெய்யப்பட்டமைக்கு காதல் விவகாரமே காரணம் என ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாடசாலை மாணவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை இன்று (09/03/2022) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.   சர்வதேச மகளிர் தினமான நேற்று மாணவி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

Read more

திருகோணமலையில் துப்பாக்கி சூடு – மூவர் கைது….. ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்!!

திருகோணமலை – கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுவூற்றுப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்பட்டிருந்த போது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் நஜீம்கான் வசீம் வயது (30), ஸாகுல் ஹமீட் முகம்மது றமீஸ் வயது(30 )ஆகிய இருவரும் பலத்து காயத்துக்குள்ளாகியுள்னனர். மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு Read More

Read more