யாழில் தீயினால் இரு குடும்பப் பெண்கள் மரணம்!!

யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்பவர் கடந்த 08ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரிய பணியில் இருந்து Read More

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிபபு!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறை மற்றும் தனியார் வீடொன்று உட்பட இன்று காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு வெடித்துள்ளது. எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல் துன்னாலை வடக்கு அமிர்தலிங்கம் பவநந்தினி என்பவரின் வீட்டிலும் காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில்…. குவிந்துள்ள கொரோனா சடலங்கள் – வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதனின் கருத்து!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனா நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 Read More

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுஅதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உட்பட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more

யாழ். பருத்தித்துறையில் இரு மதுபான சாலைகளுக்கு சீல்!!

யாழ். பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பருத்தித்துறை கிராம கோட்டுச் சந்தியிலுள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையம் என்பன இன்று பொதுச் சுகாதார பரிசோதகரினால் 14 நாட்களுக்கு மூடப்பட்டது. கடந்த வாரம் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றியோருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மதுபான விற்பனை நிலையத்தின் மேலுமொரு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் Read More

Read more

யாழ்ப்பணத்தில் உணவகம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தவர் திடீர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராக பணிபுரியும் நபரே உயிரிழந்துள்ளார். மந்திகைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அல்வாய் வடக்கை சேர்ந்த இராசையா தீபனகுமார் வயது 41 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த Read More

Read more