விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி…. சத்தமில்லாமல் சாதித்த ஈரான்!!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான் தற்போது 500 கிலோ எடையுள்ள விலங்குகளைக் கொண்ட விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுற்றுவட்டப் பாதையில் 130 கிலோ மீற்றர் தொலைவுக்கு அந்த விண்கலம் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார். குறித்த விண்கலத்தில் என்னவிலங்குகள், எத்தனை விலங்குகள் அனுப்பப்பட்டன என்பது தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. ஈரான் கடந்த 2013இல் விண்கலம் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று வரச் செய்ததாகத் Read More

Read more

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை….. திடீரென இடைநிறுத்தம்!!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’(Gaganyaan) திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, TV-T1 விண்கலம் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று (21/10/2023) காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக திட்டமிப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வானிலை காரணமாக மாதிரி விண்கலம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 15 நிமிடங்கள் தாமதம் ஆகலாம் என கூறப்பட்டது . இந்நிலையில், காலை 8.45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த சோதனை Read More

Read more

அடுத்த iPhone இனை அறிமுக திகதி வெளியீடு….. கொண்டாடும் ஆர்வலர்கள்!!

இந்த மாதம் 12 ஆம் திகதி அப்பிள் நிறுவனம்(Apple Company) அதன் அடுத்த iPhone(iPhone 15) இனை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் வெகுவான பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இனி அப்பிள் நிறுவனம்(Apple Company) வெளியிட இருக்கும் தனது போன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு USB – type C type Charging port ஐ (charging port) ஐ இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களுக்கு என்று பிரத்தியேகமான சார்ஜிங் போர்ட்டை Read More

Read more

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த உருவாக்கம்….. iPhone 15 வெளியீடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

உலகளாவிய முன்னணியான தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள்(Apple) தற்போது தனது இறுதி அப்டேட் ஆன ஐபோன் 15(iPhone 15) இன் வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது. அடுத்த தலைமுறை ஐபோன் 15(iPhone 15 Smartphone) கைத்தொலைபேசிகள் செப்டம்பர் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த நிகழ்வு இரவு 10:30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன்கள்(iPhone) இந்த ஆண்டு பல பகுதிகளில் பாரிய மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ள. இருப்பினும், வடிவமைப்பு பெரிதாக மாறாமல் இருக்கலாம். Read More

Read more

NASA – Spacex சுழற்சி முறையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியும் செயன்முறை….. தரையிறங்கினர் ஏழாவது குழுவினர்!!

நாசாவுடன்(NASA) இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்(Spacex) சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செல்லும் குழுக்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருக்கும். இறுதியாக கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலத்தில்(Crew Dragon Endeavour) Read More

Read more

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திராயன் 3 விண்கலம்….. நிலாவின் தென்துருவதில் கால்பதித்த முதல் நாடாக இந்தியா சாதனை!!

உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றிப்பயணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தரையிறக்க காட்சியை இணையவழியில் நேரலையாக பார்த்துள்ளார். இதன்மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் Read More

Read more

வளமையை விட 17% பெரியதாக 30% பிரகாசமாக தோன்றும்…. நீல சந்திரன் என்று அழைக்கப்படும் ‘SuperMoon’ இம்மாத இறுதியில்!!

ஆகஸ்ட் 30 புதன்கிழமை இரவு 222,043 மைல்கள் (357,344 கிமீ) தொலைவில் இது இன்னும் மிக அருகில் காட்சியளிக்க உள்ளது. மேலும், இது இரண்டாவது முழு சந்திரன் என்பதால், இது நீல சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் போது இந்த புள்ளிவிவரங்கள் சுமார் 252,088 மைல்கள் (405,696 கிமீ) தூரத்துடன் ஒப்பிடுகின்றன. இவ்வகையில், ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அது பூமிக்கு மிக அருகில் Read More

Read more

AI பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது பிரபல தனியார் தொலைக்காடசி!!

இந்தியாவின் ஒடிசா தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை(Artificial Intelligence Female News Reader) அறிமுகம் செய்துள்ளது. லிசா(Lisa) என பெயரிடப்படவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒடியா(Odia) மற்றும் ஆங்கிலம்(English) என இரு மொழிகளிலும் செய்திகளை வாசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க Read More

Read more

“இளமையான தோற்றத்தை பேண புதிய மருந்து – இதன் மூலம் வயதையும் மாற்றியமைக்கலாம்”….. ஆதாரங்களுடன் விளக்கம்!!

அமெரிக்காவின் ஹார்வர்டில்(Harvard) உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக்(Cocktail) கண்டுபிடித்துள்ளனர் “கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை” என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக்(06 of Chemical Cocktail) கண்டுபிடித்துள்ளது. இது மனித தோலின் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்தாக கூறப்படுகிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்  டேவிட் சின்க்ளேர்(Harvard Researcher David Sinclair) இந்த செயல்முறையைத் Read More

Read more

தற்சமயம் இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள் குழு….. இலங்கை – செவ்வாய் கிரகத்திற்கிடையில் ஒற்றுமை!!

நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று தற்சமயம் சில முக்கியமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் இடையில் உள்ள ஒத்த தன்மைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள குறித்த குழு இலங்கை வந்துள்ளது. நாசாவின் மூத்த விஞ்ஞானியான இலங்கையை சேர்ந்தவரான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்பு பயணங்களை மேற்கொண்டு பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்கு Read More

Read more