#Karaveddy

FEATUREDLatestNewsTOP STORIES

வதிரியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு….. வயோதிபப் பெண் தாக்கப்பட்டு கொலை!!

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் போதே தாக்குதலுக்கு இலக்காகி 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது  தலையில் தாக்கப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். வழங்கப்பட்ட Read More

Read More
LatestNewsTOP STORIES

மாலுசந்தியில் ஆட்டோ – மோ. சைக்கிள் விபத்து….. 3 மாணவிகள் உட்பட 5 பேர் படுகாயம்!!

வடமராட்சி மாலுசந்தி வீதியில் நாய்கள் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ, மோட்டார் சையிக்கிள் விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி மாலுசந்தி வீதியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் 3 மாணவிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் , மாலுசந்தியில் இருந்து மந்திகை நோக்கி சென்ற ஆட்டோ தனியார் கல்வி நிலையம் தாண்டி சிறிது தூரத்தில் நாய்கள் கூட்டம் Read More

Read More
LatestNewsTOP STORIES

விக்னேஸ்வரா கல்லூரி வீதி நீர் வடிகால் சம்பந்தமான கூட்டம் இன்று!!

நாளைய தினம் நடைபெறவுள்ள கரவெட்டி விக்னேஸ்வரா வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியை நீர் வடிகால் செய்யாமல் புனரமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. நீர் வடிகால் செய்யாமல் வீதி அபிவிருத்தி நடைபெற்றால் நெல்லியடி பிரதான வீதியால் வரும் வெள்ளம் முதல் அனைத்து வெள்ள நீரும் கரவெட்டி இராஜ கிராமம் மற்றும் மத்தொணி கிராமங்கள் உட்பட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகும் Read More

Read More
LatestNewsTOP STORIES

தனக்கு தானே தீ வைத்த கர்ப்பிணி பெண்….. வடமராட்சி மண்டானில் சம்பவம்!!

வடமராடசியில் உள்ள மண்டன் என்னும் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீவுப்பகுதியை சேர்ந்த குறித்த பெண்  மண்டான் பகுதியில்  அமைந்துள்ள தனது கணவரின் வீட்டிற்கு வருகைதந்து அங்கே ஏற்படட பிரச்னை காரணமாக, காலை 11.00 மணியளவில் வீட்டில் இருந்த மண்ணெய்யை தன்மேல் ஊற்றி வயிற்றில் கருவுடன் இருந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read More
LatestNewsTOP STORIES

J/348, J/350 பிரிவுகளில் “திடீர் மினி சூறாவளி”….. 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு (புகைப்படங்கள்)!!

யாழ்ப்பாணம் – கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரணவாய் பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா (T.N Suriyaraja) தெரிவித்துள்ளார். நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்த சேத விவரங்கள் பதிவாகியுள்ள அதே வேளை, 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை Read More

Read More
LatestNews

16 வருடங்களின் பின்னர் திருடன் கைது…… வடமரட்சியில் சம்பவம்!!

16 வருடங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்டவரை காத்திருந்து நெல்லியடி  கைது செய்துள்ளனர். நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மகா வித்தியாலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு இரவு நேர காவலாளியை கட்டிவைத்து சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கைவிரல் அடையாளங்களை பரிசோதித்து வைத்திருந்த பொலீஸார் நேற்று வல்லை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த நபர் நவாலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

யாழில் திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா!!

யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக 179 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 49 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆலயத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அறியப்பட்ட நிலையில், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் பொதுச் சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் Read More

Read More
LatestNews

யாழ் நெல்லியடியில் குளிர்பானத்தால் சிக்கிய திருடனின் பகீர் வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி, நெல்லியடி நகரில் உள்ள மருந்தகத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞன், வேறு திருட்டுக்களிலும் ஈடுபட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. போதைக்கு அடிமையான குறித்த இளைஞன், பணத்தேவைக்காக திருடியதாக கூறியுள்ளான். கடந்த 4ஆம் திகதி நெல்லியடி நகரிலுள்ள மருந்தகம் ஒன்றை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சிசிரிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருந்தன. அதோடு வர்த்தக நிலையத்திற்குள் குளிர்பானத்தை கண்டதும், முக மறைப்பை அகற்றி, குளிர்பானத்தை அருந்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் Read More

Read More
LatestNews

கரவெட்டியில் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார் நாமல்!!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் இயந்திரவியல்சார் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தை இன்று திறந்து வைத்தார். ஒன்பது மாகாணங்களில் அரசின் தேசிய கொள்கையின் பிரகாரம் கழிவுப்பொருட்களை சேதனப் பசளையாக்கும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக யாழ். வடமராட்சியின் கரவெட்டி பிரதேச சபையின் முள்ளி பகுதியில் இன்று அமைச்சரினால் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண ஆளுநர், யாழ். அரசாங்க அதிபர் Read More

Read More
LatestNews

யாழில் தவறான முடிவெடுத்து இருவர் உயிரிழப்பு!!!!

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் அவர், நிதி Read More

Read More