அடுத்த ஆண்டுக்கான உயர்தரப்பரீடசைகள் பிற்போடுவது தொடர்பில் கல்வியமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினையும், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தையும் பாதிக்கும் என்பதால் இதனை அனுமதிக்க முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்பதால் அதனைப் பிற்போட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் Read More

Read more

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது. இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளின் முதல் பகுதி கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. Read More

Read more

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம்….. உறைந்துபோயுள்ள பரீட்ச்சாத்திகள்!!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதுமாத்திரமல்லாமல், க.பொ,த சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று (18/08/2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் பரீட்சைகள் Read More

Read more

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதி அறிவிப்பு – இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றன…… கல்வி அமைச்சர்!!

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரங்களில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகாத நிலையில் பரீட்சைகள் நிறைவடைந்து ஆறுமாதங்கள் கடந்து விட்டது.   இந்நிலையில், உயர்தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்ட இந்தத் தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு இன்று(03/08/2022) அறிவித்துள்ளார். Read More

Read more

விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம்!!

அண்மையில் இடம்பெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.   விடைத்தாள் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் குழுக்களுக்கு ஒரு விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்திற்கொண்டு மத்திய நிலைய பணிக்குழாம் மற்றும் விடைத்தாள் பரிசோதகர்களுக்காக செலுத்தப்படும் நாளாந்த கொடுப்பனவிலும் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு Read More

Read more

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்….. கல்வி அமைச்சர்!!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார். 2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதி வரை இந்த வருடம் பாடசாலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான Read More

Read more

சாதாரண தரப் பரீடசை எழுதும் “மாணவி” ‘பரீட்சை கண்காணிப்பாளர்’ ஒருவரால் பலாத்காரம்!!

நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர் ‘நச்சதுவ’வில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதன்கிழமை (25/0/202) பரீட்சை நிலையத்தில் வைத்து குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திகதியில் நடைபெற்ற வரலாறு பரீட்சை தொடர்பான கேள்விக்கு உதவி செய்கிறேன் என்ற போர்வையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த மாணவி அன்றைய தினம் பாடசாலையில் உள்ள ஆசிரியை Read More

Read more

சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முக்கிய நிபந்தனை!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் மகிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், Read More

Read more

சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுமதி அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ளாத மாணவர்களை  WWW.DOENETS.LK  ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அனுமதி அட்டையின் பிரதியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிரவரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்தி வைப்பது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி 23ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கப்படவுள்ளது என நேற்று செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவ்வாறான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more