சாதாரண தர மாணவர்களுக்கு வெளியானது பரீட்சை நேரசூசி

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான நேரசூசி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பரீட்சை எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  

Read more

மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதனைத் தெரிவித்தார். போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை தயார்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்துவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களில், மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் தொழில்துறை மேம்பாட்டுத் துறைகளிலும் ஈடுபடுவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் Read More

Read more

பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து….. ஆபத்தான நிலையில் 36 மாணவர்கள்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29/02/2024) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று(29/02/2024) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!!

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இந்த முழு வேலைத்திட்டத்திற்கும் அதிபர் நிதியத்திலிருந்து 3600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க அதிபர் ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான Read More

Read more

பாடசாலை மாணவர்களுக்கு இனிப்பான கசப்புச் செய்தி!!

தமிழர்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13/11/2023) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும் அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18/11/2023) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் Read More

Read more

அடுத்த ஆண்டுக்கான உயர்தரப்பரீடசைகள் பிற்போடுவது தொடர்பில் கல்வியமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினையும், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தையும் பாதிக்கும் என்பதால் இதனை அனுமதிக்க முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்பதால் அதனைப் பிற்போட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் Read More

Read more

வகுப்பு முடித்து சகோதரிக்காக காத்திருந்த 12 வயது மாணவி பாலியல் வன்புணர்வு….. பிரதி அதிபர் கைது!!

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் வகுப்பில் கலந்துகொண்ட மாணவிகளில் ஒருவரே இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வகுப்பு முடிந்து ஏனைய பிள்ளைகள் சென்ற நிலையில் குறித்த மாணவி தனது சகோதரிக்காக காத்திருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மதியம் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும் தன்னை Read More

Read more

19 வயது மாணவி வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்வு….. மாணவி எடுத்த விபரீத முயற்சி!!

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குருநாகல் கட்டுபொத்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கா/பொ/த உயர்தரத்தில் இரண்டாம் வருடத்தில் இல் கல்வி கற்கும் மாணவியை வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக தெரிவித்து கட்டுபொத்த காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அத்துடன், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி சில மாத்திரைகளை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சியம்பலாவையில் வசிக்கும் கா/பொ/த உயர்தரத்தில் இரண்டாம் வருடத்தில் இல் கல்வி கற்கும் குறித்த Read More

Read more

பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக…… வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவித்தல்!!

மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது. அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் Read More

Read more

யாழில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது….. அரச பாடசாலை ஒன்று!!

யாழ்ப்பாணம் – நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இருப்பினும், இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more