யாழ் – அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கப்பட்டு….. கூட்டு பாலியல் வன்புணர்வு!!

15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை பதிவு செய்த அச்சுவேலி காவல்றையினர் பாதிக்கப்பட்ட சிறுமியை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்து அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளனர். ஆனால் , நேற்று(20/03/2023) இரவு Read More

Read more

மூன்று பெண்கள் கழுத்து நெரித்து கொலை….. 34 வயது நபர் கைது!!

மூன்று பெண்கள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு அவர்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ம் திகதி இத்தேபனையில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதுடன், கடந்த மாதம் எல்பிட்டியவில் இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர்களது உடமைகளும் Read More

Read more

பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க….. கடந்த ஒரு வாரத்திற்குள் பல நூறு மாணவிகளுக்கு விசம் கொடுத்த மர்ம நபர்கள்!!

பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க நினைத்த சிலர் பல நூறு மாணவிகளுக்கு விசம் கொடுத்த சம்பவம் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சில மர்ம நபர்கள் பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக எல்லை மீறிய சில மோசமான காரியங்களை அவர்கள் செய்துள்ளனர். பெண்கள் கல்வி கற்பதை நிறுத்த ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே அமைந்துள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான புனித நகரமான கோமில் பாடசாலைக்குச் செல்லும் சிறுமிகளுக்கு சிலர் விசம் கொடுக்கும் அளவுக்குச் Read More

Read more

கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி….. கணவர் தலையில் கட்டையால் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி – யாழில் சம்பவம்!!

  கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.   இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து கணவர் 05 லிற்றர் பெட்ரோலினை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.   இந்நிலையில், மனைவி வீட்டிற்கு அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரியை வரவழைத்து கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினை அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.   Read More

Read more

இளவாலையில் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்படட ‘ஆறு வயது சிறுமி’ போலீசில் முறைப்பாடு!!

யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் பல்வேறு இடங்களிலும் சிறுவர் Read More

Read more

மயக்கமடைந்த மனைவியை 70 துண்டுகளாக வெட்டி அதை ஊரெல்லாம் வீசியவர் கைது!!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி 70 துண்டுகளாக வெட்டி நகரமெல்லாம் தூவிய IT Engineer இற்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் ஒரு Softwere Engineer. இவர் தனது காதலி அனுபமா குலாட்டி என்பவரை 1999 இல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அனுபமா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர். நாடு திரும்பியது ராஜேஷ் Read More

Read more

பட்டப்பகலில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு திரவத்தை ஊற்றி உயிருடன் தீ வைத்த நபர்!!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். இளம் Read More

Read more

20 வயது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சட்டத்தின் முன் சரணடைந்த கணவன்!!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள மகிழடித்தீவு – காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் – மனைவி இடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை Read More

Read more

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு 13 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி!!

இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு தனது 13 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இச்சம்பவமானது நேற்றையதினம்(11/06/2022) இடம்பெற்றுள்ளது.   குறித்த சந்தேகநபரொருவரால் 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தன்னை கொல்ல முயன்றபோது வீட்டில் இருந்த 13 வயது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்.   சந்தேக நபர் பின்னர் வீட்டிற்குள் Read More

Read more

14 வயது சிறுமி ஒருவர் மாயம்!!

தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கண்டி-கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்நிலையில், கலஹா காவல் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலஹா காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பத்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Read more