ஆசிரியையான மனைவியின் இரு கால்களையும் வெட்டி எடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய்!!

காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் 2 கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக கடந்த சனிக்கிழமை(17/02/2024) மாலை குறித்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கு‌றி‌த்த செயலை செய்த பின்னர், சந்தேகநபரான கணவர் கையடக்கத் தொலைபேசியுடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதான மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தொடந்துவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஆசிரியை என Read More

Read more

திடீர் சுகவீனதிதால் மரணமடைந்த யாழ் பல்கலை மாணவி….. கண்ணீர் மல்க இறுதி யாத்திரைக்கு அனுப்பிவைத்த உறவுகள்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, சாயுடை  பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம்(25/12/2023) அவரது இல்லத்தில் நடைபெற்று மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. அவரது இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர், நண்பிகள் , ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் Read More

Read more

சிகிச்சைபெற வந்த 29 வயது பெண்ணை வன்புணர்வு செய்த மருத்துவர்!!

தான்நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில் நடத்தப்படும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினரால் மருத்துவர் கைது Read More

Read more

பழங்குடியின 11 வயது மாணாவியை நாசம் செய்த…. அதிபர் மற்றும் ஆசிரியர்!!

இந்தியாவின் ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களா சிறுமிக்கு அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை சோதனை செய்த வைத்தியர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். இந்நிலையில், அந்த மாணவி பெற்றோரிடம் நடந்த Read More

Read more

காரில் இருந்து குடித்த பெண்கள் – தட்டி கேட்ட போலீஸ் அதிகாரி….. அடித்த அடியில் வைத்தியசாலையில் அனுமதி!!

கிரிகோரி வீதிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (05/11/2023) நள்ளிரவு 12.00 மணியளவில் காரை நிறுத்தி மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படும் இரு பெண்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்கள் இருவரும் அதிக போதை காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிக்கும் 30 Read More

Read more

மனைவியை அடித்து கொன்றுவிட்டு….. தானும் துக்கிட்டு உயிரை மாய்த்த கணவன்!!

களுத்துறை மாவட்டம் அளுத்கம – தன்வத்தகொட பகுதியில் மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம்(04/11/2023) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில் கணவன் அடித்துள்ளார். இதனால், பலத்த காயம் அடைந்த மனைவி கீழே விழுந்ததையடுத்து கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், விசாரணையில் இருவரும் நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் முரண்பட்டு வந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. Read More

Read more

திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு – உயிரிழந்தும் 07 பேராக வாழும் மாணவி….. வெளியாகிய பெறுபேறுகளில் அதிவிசேட சித்திகள்!!

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3A  பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று Read More

Read more

விளையாட்டு நிகழ்வு முடிந்ததும் காணாமல்போன….. சிறுவர் இல்லத்தில் இருந்த16 வயது சிறுமி!!

சிறுவர் இல்லத்தில் இருந்த 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவர் இல்லத்தின் விடுதி பொறுப்பாளர் குளியாப்பிட்டிய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். ஹலவத்த – கட்டுபொத்த எரோமா சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளார். மஹவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறுமி இந்த சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வடமேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்களின் சிறுவர்கள் பங்குபற்றிய விளையாட்டு நிகழ்வு நேற்று (02/09/2023) குளியாபிட்டிய ஷில்பா ஷாலிகா விளையாட்டரங்கில் Read More

Read more

அரசின் அனுமதியுடன் பெண்களை விற்கும் “மணமகள்” சந்தை….. பல்கேரியாவில்

பல்கேரியா(Bulgaria) நாட்டில் அரசின் அனுமதியுடன் விசித்திரமான சந்தை ஒன்று உள்ளது. அதாவது, பெண்களை விற்கும் ‘மணமகள்’ சந்தையே அதுவாகும். இந்த சந்தையில் பெண் கிடைக்காதவர்கள் அலைந்து திரிந்து தமக்கு பிடித்த மணமகளை தேர்ந்தெடுத்து வாங்குவர். இந்த சந்தையானது அந்நாட்டில் அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது. ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் விற்கப்படும் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன. கலையடி சமூகத்தினர் தங்களின் மகள்களை இந்த சந்தையில் விற்கின்றனர். இந்த பெண்களை Read More

Read more

சரக்கு புகையிரதத்தில்  முன் பாய்ந்து 28 வயது யுவதி தற்கொலை!!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு புகையிரதத்தில்  முன் பாய்ந்து யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(09/08/2023) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி ஹட்டன்  நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும், குறித்த யுவதி ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் Read More

Read more