இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்!!

சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சபையுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று சபைக்கும் இலங்கைக்கு வருமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் தகவல்!!

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.11.2023) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான கட்ஆஃப் (Cut-off) புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  வரலாற்றில் முதல் தடவை இவ்வாறு வெளியிடப்பட்டால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியானவையாக கருதப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகளும் கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

Read more

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கியில் கோளாறு….. மின்விநியோகம் தடைப்படுமா!!

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு உயர் அழுத்த வெப்பமாக்கி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கோளாறு காரணமாக மின் உற்பத்தி தடைப்படாது என்றும் மூன்றாவது மின் பிறப்பாக்கி அலகினை அதிகளவில் செயற்படுத்துவதன் ஊடாக மின்னுற்பத்தியை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய நிர்வாகம் தெரிவிக்கின்றது. பழுதடைந்த மின்பிறப்பாக்கி அலகினை பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பழுதுபார்க்கும் காலத்தில் எந்தவித மின்சார தடையும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது. நீர் மின்சாரம் Read More

Read more

பாடசாலை மாணவர்களுக்கு இனிப்பான கசப்புச் செய்தி!!

தமிழர்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13/11/2023) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும் அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18/11/2023) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் Read More

Read more

காரில் இருந்து குடித்த பெண்கள் – தட்டி கேட்ட போலீஸ் அதிகாரி….. அடித்த அடியில் வைத்தியசாலையில் அனுமதி!!

கிரிகோரி வீதிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (05/11/2023) நள்ளிரவு 12.00 மணியளவில் காரை நிறுத்தி மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படும் இரு பெண்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்கள் இருவரும் அதிக போதை காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிக்கும் 30 Read More

Read more

அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாழ் இளைஞனுடையது….. முழுமையான விபரங்கள்!!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட யாழ். இளைஞனின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று(05/11/2023) மதியம் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றிருந்ததாகவும் இந்தநிலையிலேயே இன்றையதினம்(06/11/2023) குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்படுகின்றது. முகத்திலும் உடலிலும் அடிகாயங்களுடன்….. வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்!!

Read more

தென்னிலங்கையில் ஒரே நாளில் நடந்த பாரிய பேருந்து விபத்துகள்!!

இலங்கையின் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் சுமார் நான்கு பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜுகம விபத்து இந்த நிலையில், நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பகுதியில் பாரவூர்தியுடன் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய Read More

Read more

சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த கைதி!!

புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் ஆணொருவர் துணியால் ஜன்னலில் கட்டி தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று(5) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்று(5) நீதிமன்றம் வழக்கிற்கு கொண்டுவரப்பட்டு புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் கப்புஹேன கனேமுல்ல Read More

Read more

அடுத்த ஆண்டுக்கான உயர்தரப்பரீடசைகள் பிற்போடுவது தொடர்பில் கல்வியமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினையும், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தையும் பாதிக்கும் என்பதால் இதனை அனுமதிக்க முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்பதால் அதனைப் பிற்போட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் Read More

Read more

திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு – உயிரிழந்தும் 07 பேராக வாழும் மாணவி….. வெளியாகிய பெறுபேறுகளில் அதிவிசேட சித்திகள்!!

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3A  பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று Read More

Read more