#Examination Department

FEATUREDLatestNews

பரீட்சைகள் மற்றும் விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,  தரம் 3 மாணவர்களுக்கான பாடசாலைகளை நடத்துவதற்கான தேவைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வரும் அதேவேளை, தினசரி கல்வி நடவடிக்கைகளில் இருந்து தரம் 01 Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம்!!

அண்மையில் இடம்பெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.   விடைத்தாள் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் குழுக்களுக்கு ஒரு விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்திற்கொண்டு மத்திய நிலைய பணிக்குழாம் மற்றும் விடைத்தாள் பரிசோதகர்களுக்காக செலுத்தப்படும் நாளாந்த கொடுப்பனவிலும் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்….. கல்வி அமைச்சர்!!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார். 2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதி வரை இந்த வருடம் பாடசாலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுமதி அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ளாத மாணவர்களை  WWW.DOENETS.LK  ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அனுமதி அட்டையின் பிரதியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிரவரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsTOP STORIES

உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைகளில் தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (06/04/0222) செய்முறை பரீட்சைகள் இடம்பெற்ற நிலையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட பரீடசைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்த முடியும் என மேல் மாகாண கல்வி பணிப்பாளர் சிறிலால் நொனிஸ் (Srila Nonis) தெரிவித்துள்ளார்.   பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   9 மற்றும் 10ஆம் தரங்களுக்கான வினாத்தாள்கள் வலய மட்டத்தில் அச்சிடப்படவுள்ளதுடன், 11ஆம் தரத்திற்கான வினாத்தாள்கள் Read More

Read More
FEATUREDLatestNews

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. பரீட்சை திணைக்களத்தின்  www.doenets.lk என்ற அதிகாரபூர்வ இணைய தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த பரீட்சை நடாத்தப்படவிருந்த போதிலும் கொரோனா பெருந்தொற்று நிலைமைகளினால் பரீட்சை நடாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் சாதாரண Read More

Read More
FEATUREDLatestNews

உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைத்தால்……வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை

ஒமைக்ரோன் திரிபு தீவிரவமாக பரவி வரும் நிலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைத்தால், நீண்ட காலத்திற்கு அந்த பரீட்சையை நடாத்த முடியாது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை உரிய காலத்தில் நடாத்த தவறினால், சில வருடங்களுக்கு பரீட்சையை நடாத்த முடியாத அபாய நிலை காணப்படுகின்றது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ (Lakkumar Fernando) தெரிவித்துள்ளார். ஒத்தி Read More

Read More