FEATUREDLatestNewsTOP STORIES

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம்….. உறைந்துபோயுள்ள பரீட்ச்சாத்திகள்!!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி,

கடந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமல்லாமல், க.பொ,த சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று (18/08/2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,

மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளத்து.

இந்நிலையில்,

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *