வெகுவிரைவில் புதிய 2600 ஆசிரியர்கள்….. கல்வியமைச்சர் அதிரடி!!

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்காக, விரைவில் 26 ஆயிரம் ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரங்களில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. வடமேல் மாகாணத்தில் குறித்த வேலைத்திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசுகையில், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு கிரமமான Read More

Read more

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ‘அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படும்’….. கல்வி அமைச்சு!!

கொழும்பு நகர எல்லையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலைகளுக்கு இணைய வழி கல்விக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது .

Read more

பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பம்….. ஆனால் மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் பிரச்சினை!!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நாளை முதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு Read More

Read more

சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முக்கிய நிபந்தனை!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் மகிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், Read More

Read more

நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் Read More

Read more

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் Read More

Read more

பாடசாலையில் பட்டினியால் மாணவர்கள் மயங்கி விழுவது அதிகரித்துள்ளது….. பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர்!!

பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போஷாக்கு வேலைத்திட்டமும் தற்போது நின்று போயுள்ளதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுஜீவ விமலரத்ன தெரிவித்துள்ளார். புத்தகங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் காலணிகளின் விலைகளும்,பாடசாலை சீருடைகளின் விலைகளும் 200 வீதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் உணவுகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன. சில மாணவர்கள் காலையில் பாடசாலையில் நடக்கும் Read More

Read more

ஆசிரியர்களுடன் மாணவர்களும் அயல் பாடசாலைகளுக்கு மாற்ற வேண்டும்….. கல்வி அமைச்சின் செயலாளர்!!

எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்யே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்தை மாற்றித் தருமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை உண்மையில் சிறந்ததொரு யோசனையாகும். எவ்வாறிருப்பினும், அதிபர், ஆசிரியர்களுக்கு மாத்திரம் Read More

Read more

100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் நாளை!!

அரசாங்கத்திற்கு எதிராக நாளை பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அரசு பதவி விலகக் கோரி 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அரசு, பொது மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இவற்றைவிட, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திற்கு எதிராக நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. 2,40,000 ஆசிரியர்கள் மற்றும் 16,000 Read More

Read more

பாடசாலை நேரம் ஒருமணத்தியாலத்தால் அதிகரிக்கும் தீர்மானத்தில் திடீர் மாற்றம்!!

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளது

Read more