#Tamils

FEATUREDLatestNewsTOP STORIES

900 வருட பழமை வாய்ந்த “Tower of London” கோட்டையில் கம்பீரமாக பறக்கும் தமிழீழத் தேசியக் கொடி!!

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மத்திய லண்டனில் அமைந்துள்ள Tower of London என்ற 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி(Tamil eelam) சாத்திய கல்லறையின் மேல் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டது. லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தமிழர் உரிமைப் போரில் உயிர்நீத்தோருக்கான நினைவேந்தலுக்கு….. பொருட்களை சேகரிக்க யாழ் பல்கலை மாணவர்களின் புதிய திட்டம்!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை. அந்தவகையில், இவ்வாண்டும் மாவீரர் வார நாள் நிகழ்வுகளை தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசங்களும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

தமிழீழம் எனும் பெயரில் புதிதாக வலைப்பந்தாட்ட அணி….. பூரிப்பில் தமிழர்கள்!!

தமிழீழம் எனும் பெயரோடு சிறப்பான வலைப்பந்தாட்ட பெண்கள் அணி ஒன்று லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பலதரப்பட்ட வலிகளை சுமந்து நிக்கும் எமது மக்களுக்கு கண்ணெதிரே எமது இளைய தமிழ்சமுதாயம் தமிழீழம் எனும் பெயரோடு சிறந்த அணியாக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்ற காட்சி மிகுந்த பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது என தமிழர்கள் பலரும் பெருமையுடன் பேசி வருகின்றனர். TRO எனும் அமைப்பின் ஏற்பாட்டில் 08/05/2023 அன்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் தமிழீழ வலைப்பந்து அணியானது மிகவும் சிறப்பான ஆட்டத்தை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் – வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு….. முழுமையான விபரங்கள்!!

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வலி – வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(03/01/2023) விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி – அந்தனிபுரத்தில் இன்று(03/01/2023) மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணனர் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளார். காங்கேசன்துறை – மத்தி (J 234) – 50.59 ஏக்கர், மயிலிட்டி Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூரான் மகோற்சவம்….. புதிய நடைமுறைகள் வெளியீடு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது. மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(26/07/2022) காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

தமிழகம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் தற்கொலை!!

தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் கைபேசியில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் தற்கொலை செயது கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார். இந்நிலையில், அவரின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கனடாவில் ஈழத்தமிழருக்கான நினைவுத் தூபியின்(முள்ளிவாய்க்கால்) மாதிரிவடிவத்தை அமைப்பதற்கு அந்தநாட்டு அரசு அனுமதி!!

முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு அழித்துச் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழருக்கான நினைவுத் தூபியின் மாதிரிவடிவத்தை பிறம்ரன் பெருநகர் இன்று உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை கனடா பிரம்ரன் மாநகரசபை உருவாக்க முன் வந்துள்ளது. கனடாவின் புகழ் பூத்த பூங்காவான செங்கூசி பூங்காவில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கி தமிழ் மக்களுக்கு தந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த மிகப் பெரிய இனவழிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனப்படுகொலை இருந்த போதிலும், அதனை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கை தமிழர் அகதிகளுக்காக 317 கோடிரூபா செலவில் வீடுகள் கட்டி கொடுக்க தமிழக அரசு முடிவு!!

தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துரையாடி, தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்பட தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு 317 கோடிரூபாவில் புதிய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

“தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக” கனேடிய நாடாளுமன்றில் ‘மே 18’ அங்கீகரிப்பு!!

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மே 18ஆம் திகதியை ‘தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக’ அங்கீகரித்ததற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணான அதாவது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை. புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிக்க நடாத்தப்பட்ட மோதலின் இறுதிக் கட்டத்தில் இலங்கையின் உண்மையான நிலைமை குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு மிக உயர்ந்த மட்டத்தில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திருகோணமலையில் தேடப்பட்ட்து யுத்த காலத்தில் விடுதலை புலிகளால் புதைக்கப்படட ஆயுதங்கள்!!

திருகோணமலை மாவட்டத்தின் – ஈச்சிலம்பற்று காவல்துறையினர் பிரிவின் விநாயகபுரம் பகுதியில் உள்ள வயல் பகுதியிலுள்ள மரமொன்றின் கீழ் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வியாழக்கிழமை (19/05/2022) மாலை மூதூர் நீதிமன்ற நீதிவானின் அனுமதியுடன் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது. காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது Read More

Read More