தமிழீழம் எனும் பெயரில் புதிதாக வலைப்பந்தாட்ட அணி….. பூரிப்பில் தமிழர்கள்!!

தமிழீழம் எனும் பெயரோடு சிறப்பான வலைப்பந்தாட்ட பெண்கள் அணி ஒன்று லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பலதரப்பட்ட வலிகளை சுமந்து நிக்கும் எமது மக்களுக்கு கண்ணெதிரே எமது இளைய தமிழ்சமுதாயம் தமிழீழம் எனும் பெயரோடு சிறந்த அணியாக

சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்ற காட்சி மிகுந்த பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது என தமிழர்கள் பலரும் பெருமையுடன் பேசி வருகின்றனர்.

TRO எனும் அமைப்பின் ஏற்பாட்டில் 08/05/2023 அன்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் தமிழீழ வலைப்பந்து அணியானது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதில் பங்குபற்றிய தமிழ் வீராங்கனைகளுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தியிருந்தார்கள்.

இதேவேளை,

உலகத்தில் எந்த இடத்தில் வலைப்பந்து போட்டிகள் நடைபெற்றாலும் இந்த தமிழீழ அணியானது பங்குகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் எமது தமிழ் உறவுகளுக்கு இவ்வாறான விடயங்கள் மிகுந்த ஆறுதலை தருவதாக பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழீழம் எனும் பெயரோடு தமிழர் சார்பாக, தமிழ் மக்கள் சார்பாக, தமிழீழம் சார்பாக ஒரு அணி உருவெடுத்திருப்பது நாம் பட்ட காயத்திற்கு மருந்தாக அமைவதாக பலர் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *