யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் குளிக்கும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

Read more

தமிழர் உரிமைப் போரில் உயிர்நீத்தோருக்கான நினைவேந்தலுக்கு….. பொருட்களை சேகரிக்க யாழ் பல்கலை மாணவர்களின் புதிய திட்டம்!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை. அந்தவகையில், இவ்வாண்டும் மாவீரர் வார நாள் நிகழ்வுகளை தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசங்களும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Read More

Read more