மீண்டும் ஆரம்பமானது காரைநகர் யாழ்(785/1) பேருந்து சேவை!!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் 785/1 பேருந்து சேவை இன்று(01/11/2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும். கடந்த காலங்களில் காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர் – மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட்டை சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக இந்த பேருந்து Read More

Read more

யாழ் – வவுனியா அரச பேருந்தினுள் நடுவழியில் நாகராணி….. அலறியடித்த பயணிகள்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எதிர்பாராதவிதமாக பெரிய நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைத்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தால் பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளனர். காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து புறப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகியும் பயணிகள் யாரும் நாகப்பாம்பு இருப்பதை கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் வாகனத்தின் எல்லைக்குள் நாகப்பாம்பைக் கண்டுள்ளார். நாகப்பாம்புடன் பேருந்தை தொடர்ந்து இயக்கிய சாரதி Read More

Read more

பஸ் இல் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்த 16 வயது மாணவன்….. மின் கம்பத்துடன் சென்றது தலை!!

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில் நேற்று(20/08/2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் மின்கம்பத்தில் தலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். Read More

Read more

அரச பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து….. 18 பேர் படுகாயம்!!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01/08/2023) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. Jaffna Univercity, எதிர்திசையில் இருந்து வந்த பேருந்து ஒன்றுக்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு சறுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் Read More

Read more

பயணிகள் பேருந்து – கார் மோதி விபத்து….. 34 பேர் உடல் கருகி ஸ்தலத்திலேயே பலி!!

ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் பேருந்து-கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 34 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அல்ஜீரியாவின் டமன்ராசெட் மாகாண சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தவேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் இந்த பேருந்து அடோல் கிராமச்சாலையில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. “பேருந்திற்குள் இருந்த பயணிகள் Read More

Read more

வேகக்கட்டுப்பாடடை இழந்து வீதியை விட்டு விலகி தனியார் பேருந்து விபத்து….. 21 படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!!

தனியார் பேருந்து ஒன்று சற்று முன்னர் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து  விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பகுதி காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

26 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து – சரியாக கூறப்படாத உயிரிழப்புகள் – கவலைக்கிடமான நிலையில் பலர்….. முழுமையான அலசல்!!

முதலாம் பகுதி பூண்டுலோயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் நேற்று(09/07/2023) மாலை வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன் இதில் காயமடைந்த 24 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக சிகிச்சைக்காக Read More

Read more

சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம்….. உண்மையை உடைத்தெறிந்த தென்னிலங்கை ஊடகம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 30 ஆம் திகதி(30/06/2023) சென்ற குறித்த பேருந்தை, மூன்று கோடி ரூபா பெறுமதியான காப்புறுதியை பெற்றுக் கொள்வதற்காவே உரிமையாளர் திட்டமிட்டு பேருந்திற்கு தீ வைத்ததாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேருந்து தீப்பிடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில் இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள வாகனம் திருத்தும் Read More

Read more

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடனுதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அண்மையில் 500 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், கடந்த காலங்களில் உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை காரணமாக சேவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிகளவான பேருந்துகள் தற்போது பழுதுபார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தத் தயார் செய்யப்பட்டுள்ளன. எனினும், அவற்றைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குப் போதுமான ஊழியர்கள் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வெற்றிடங்கள் காரணமாக Read More

Read more

பாடசாலை பேருந்துடன் மோதியது தனியார் பயணிகள் பேருந்து….. 5 மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!

தியத்தலாவை பகுதியில் பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது இன்று(16/06/2023) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரலந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கிப் பயணித்த பேருந்துடன் மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், Read More

Read more