#Ranil

FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலை மாணவர்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!!

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இந்த முழு வேலைத்திட்டத்திற்கும் அதிபர் நிதியத்திலிருந்து 3600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க அதிபர் ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் சாதனையாளர்களை சந்தித்த அதிபர் ரணில்!!

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம்(07) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அதிபர் சாதித்தவர்களை சந்தித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பளுதூக்கல் வீரன் புசாந்தன், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்செயா அனந்தசயனன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தரம் 05 புலமைப்பரிசில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் நகரில் நாளைய எதிர்ப்பு போராடத்திற்கு….. நீதிமன்றம் தடையுத்தரவு!!

யாழ்ப்பாண நகரில் நாளை(11/02/2023) சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தில்(Jaffna Cultural Center) நாளை(11/02/2023) நடைபெறும் சுதந்திர தின விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்திற்கு தடை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தேவையற்ற பலப்பிரயோகத்தை “ஐரோப்பிய ஒன்றியம்” வன்மையாகவும் கண்டிப்பு!!

இலங்கையின் போராட்டக்காரர்கள் மீது தேவையில்லாத வன்முறைகள் நடப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தேவையற்ற பலப்பிரயோகத்தை வன்மையாகவும் கண்டித்துள்ளது.   மற்றும், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கத்தின் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று கடுமையான அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கையின் புதிய அரசாங்கம் அதன் GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயற்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் இன்று காலை பதவியேற்கவுள்ளார்!!

8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று(21/07/2022) காலை பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, அவரது பதவியேற்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாலையில் தப்பிப்பதற்கும் காரணமான எதிர்ப்பாளர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புகளை முதலிகே நினைவு கூர்ந்தார்.   எவ்வாறாயினும், நாடாளுமன்ற சதிப்புரட்சியை அடுத்து ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 6.9 மில்லியன் ஆணை இழக்கப்பட்டது அதிபர் தப்பி ஓட வேண்டியிருந்தது. ஆனால், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டம்….. ரணிலின் அதிரடி திடடம்!!

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இன்று (16/07/2022) காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். நிவாரணம் வழங்குவதற்காக ஓகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை பயன்படுத்தவும் குறித்த கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஊடகத்தினரை அழைத்து அலரி மாளிகையின் தற்போதைய நிலையை காண்பித்த திணைக்களத்தினர்!!

கடந்த (09/07/2022) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் அலரி மாளிகை போராட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அதனை (14/07/2022) சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் கையளித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அலரி மாளிகையின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ள பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 என திகதி குறிப்பிட்டு கையெழுத்திட்ட கோட்டாபய!!

தனது பதவி விலகல் கடிதத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 என திகதி குறிப்பிட்டு நேற்று கையொப்பமிட்டுள்ளார் எனவும் அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் எனவும் தெரியவந்துள்ளது. அரச தலைவரின் பதவி விலகல் கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர் அதை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் கோட்டாபய  Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17.8 மில்லியன் பணம் தொடர்ப்பில்….. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் 17.8 மில்லியன் பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மொத்தம் ரூ. 17,850,000 ரூபாவை கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். பணத்தை கண்டுபிடித்த குழுவினரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த காவல்துறை குழுவினர் பணத்தை சேகரித்துள்ளனர். பணத்தை மீளப்பெற்றது தொடர்பில் காவல்துறையினர் இன்று (11/07/2022) நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

போராட்டத்தில் கிடைத்த வெற்றியை கொண்டாட முற்படடவார்…… பரிதாபமாக மரணம்!!

நேற்று முன்தினம்(10/07/2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெற்றி கிட்டியதை அடுத்து  தேசியக் கொடியுடன் மின்கம்பத்தில் ஏறியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். அவரது சடலம் அலவ்வ கபுவரல புகையிரதப் பாதையில் நேற்று (10/07/2022) கண்டெடுக்கப்பட்டுள்ளது. அலவ்வ குடுமுல்ல பகுதியைச் சேர்ந்த சமிந்த லால் குமார் (39 வயது) என்பவரே சடலமாக மீடகப்பட்டவராவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More