பாடசாலை மாணவர்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!!

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இந்த முழு வேலைத்திட்டத்திற்கும் அதிபர் நிதியத்திலிருந்து 3600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க அதிபர் ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான Read More

Read more

யாழில் சாதனையாளர்களை சந்தித்த அதிபர் ரணில்!!

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம்(07) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அதிபர் சாதித்தவர்களை சந்தித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பளுதூக்கல் வீரன் புசாந்தன், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்செயா அனந்தசயனன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தரம் 05 புலமைப்பரிசில் Read More

Read more

சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில்….. பல அமைச்சர்களால் பதவி விலகல் கடிதங்கள் ஜனதிபதிக்கு அனுப்பிவைப்பு!!

சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் பல அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (11/07/2022) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(11/07/2022) காலை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார் Read More

Read more

நாடு முழுவதும்  ஆயுதம் தாங்கிய படையினர்….. கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்டது விசேட கட்டளை!!

இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக கோட்டாபய ராஜபக்சவினால் விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காகவே இந்தக் கட்ளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும்  ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட கட்டளை தொடர்பில் சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 40ஆவது அதிகார சபையான  பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள Read More

Read more

அரச மற்றும் தனியார் ‘கூட்டுத் திட்டத்தை’ நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியால் விசேட உத்தரவு!!

உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உணவுப் பற்றாக்குறையைத் தணித்தல் தொடர்பாக அரச தலைவர்மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்துள்ளார். உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் இறக்குமதி, விநியோகம், முறையான மேலாண்மை, விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக தேசிய உரக் கொள்கையொன்றை Read More

Read more

நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் Read More

Read more

ஜனாதிபதி பதவி விலகுவது ஒருபோதும் நடக்காது….. பிரதமர் ரணில் பகிரங்கம்!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் Read More

Read more

நா‌ட்டி‌ல் அமுல்படுத்தப்பட்டது அவசரகால சட்டம்!!

நேற்று (06/04/2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read more

அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்…… ஜனாதிபதி கோட்டாபய!!

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வகட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  கட்சித் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முழுமையான இணக்கத்தை கட்சித் தலைவர்களுக்கு கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

பத‌வி விலகல் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவ‌ல்!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் சற்று முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.   அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கலந்துரையாடலின் போது மகிந்த ராஜபக்ச முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன்போது, தான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More

Read more