முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, எதிர்காலத்தில் நான்காம்கட்ட தடுப்பூசி….. புதிய சுகாதார அமைச்சர்!!

எதிர்வரும் காலத்தில் கொவிட் – 19 நான்காம் கட்ட தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.   நேற்று புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின், செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.   இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.   எனினும், பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முக கவசம் Read More

Read more

மீண்டும் நாட்டில் கோவிட் மரணங்கள்….. நேற்று மட்டும் நான்கு பேர் மரணம்!!

நாட்டில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இவ் உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,469 ஆக உயர்வடைந்துள்ளது.

Read more

கொரோனாத் தொற்றின் தாக்கம் தொடர்பாக WHO வெளியிடட முக்கிய அறிவிப்பு!!

கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.   உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Read more

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சந்தோசமான செய்தி!!

இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகள், பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொவிட் பரிசோதனை அவசியமற்றது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச ( Upul Dharmadasa)  தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முன்னர், பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை செலுத்திக்கொண்டமையானது பூரண Read More

Read more

UAE இற்கு பயணிப்பவர்களுக்கு கட்டாயமான Rapid PCR நெகட்டிவ் பரிசோதனை அறிக்கை தேவையில்லை!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) பயணிக்கும் இலங்கையர்கள் கட்டாயமான Rapid PCR நெகட்டிவ் பரிசோதனை அறிக்கையைப் பெற வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பயண ஆலோசனையை நேற்று, பெப்ரவரி 22, 2022 முதல் திருத்தியமைத்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருத்தப்பட்ட பயண ஆலோசனையின் விபரங்கள் வருமாறு,

Read more

எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என நீங்களே முடிவெடுக்க வேண்டாம்….. டொக்டர் ஹேமந்த ஹேரத்!!

48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதை அவதானித்த நிலையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை  விடுப்பதாக தெரிவித்தார். மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று Read More

Read more

நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read more

நாடாளுமன்றத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று (14) உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான பணியாட் தொகுதியினரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதுவரை 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா Read More

Read more

ஜப்பான் நாட்டின் இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஜப்பான் நாட்டின் இளவரசி யோகோவிற்கு (Yoko) கொரோனா நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால், தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 38 வயதான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக, காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த Yoko-விற்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. Read More

Read more

ஒமிக்ரோன் பிளாஸ்டிக்கில் 08 நாட்கள் வாழுமாம்….. புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு!!

ஒமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக்கில் 8 நாட்களும் தோலில் 21 மணித்தியாலங்களும் உயிர் வாழக்கூடியதென ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் ஏனைய திரிபுகளான அல்ஃபா, பீட்டா, காமா மற்றும் டெல்டாவை விடவும் ஒமிக்ரோன், பிளாஸ்டிக் மற்றும் தோலில் உயிர் வாழும் தன்மையின் வீதம் அதிகமென கூறப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள கியோட்டோ மாகாண மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். மதுசாரம் அடங்கிய தொற்றுநீக்கி திரவத்தை, பயன்படுத்தினால் ஒமிக்ரோன் உள்ளிட்ட அனைத்து திரிபுகளையும் 15 நொடிகளில் செயலிழக்கச் செய்து விடலாம் Read More

Read more