#Virus

FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையில் மீண்டும் கொடிய நோய்….. சுகாதார மேம்பாட்டுப் பணியகமிடமிருந்து அவசர எச்சரிக்கை!!

மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கல்முனைப் பிரதேசங்களில் மலேரியா நோய்க்கிருமியான Anopheles stephensi அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் ஜீவனி ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று(29/06/2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் “இன்புளுவென்ஸா” மற்றும் “கொரோனா”….. மிக்க கவனமாக இருக்க வேண்டுகோள்!!

இலங்கையில் தற்போதைய காலத்தில் டெங்கு இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான தொற்று நோய்கள் சிறுவர்களுடையே வேகமாக பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார். தற்சமயம் இலங்கையில் கொரோனாத் தொற்று சமூகத்தில் உள்ளது. அதனை வைத்திய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனாத் தொற்றாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

கொரோனாத் தொற்றின் தாக்கம் தொடர்பாக WHO வெளியிடட முக்கிய அறிவிப்பு!!

கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.   உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIESWorld

“லஸ்ஸா காய்ச்சல்” என்ற புதிய வகை வைரஸ் தொற்று….. பச்சிளம் குழந்தை மரணம்!!

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் (Lassa Fever) என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்கு தொற்றியமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரஸூம் லஸ்ஸா வைரஸூம் உறவு முறை தொடர்புடையவை என்பதால், இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன. இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் Luton & Dunstable மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த நோய் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் Read More

Read More
LatestNewsTOP STORIES

நீண்ட நாட்களின் பின்னர் பலியெடுத்த டெங்கு….. யாழில் 11 வயது மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த, 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சலால் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 (2022) ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் Read More

Read More
LatestNewsTOP STORIES

யாழில மீண்டும் பேராபத்து!!

இலங்கை முழுவதும் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர (Prasad Ranaweera) தெரிவித்துள்ளார். இலங்கையில் கடைசியாக மலேரியா நோயாளர் ஒருவர் 2012 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டார். 2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Read More
indiaLatest

யாழில் மீண்டும் மலேரியா நோய்!!

நீண்ட காலத்தின் பின் யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரியா அறிகுறிகளுடன் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரியின் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

புதிதாக விருத்தியடைந்த ஒமிக்ரோன் வைரஸின் புகைப்படம் வெளியிட்ட இத்தாலி விஞ்ஞானிகள்!!

புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரோன் கொரோனா வைரஸின் புகைப்படத்தை உலகில் முதன்முதலாக இத்தாலி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ரோமில் உள்ள Bambino Gesù குழந்தைகள் மருத்துவமனையின் விஞ்ஞானிகள் உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸின் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். வைரஸின் உருவத்தில் ஒட்டியிருக்கும் மனிதர்களின் செல்களுக்குள் நுழைய தேவைப்படும் புரதத்தில், டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸில் அதிக பிறழ்வுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இவை டெல்டா வகை வைரஸை விட அதிக ஆபத்தானவை என கருத Read More

Read More
LatestNews

97% அதிபர்களும், 89% ஆசிரியர்களும், 45% மாணவர்களும் வருகை…… பேராசிரியர் கபில பெரேரா!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (K.Kapila C.K.Perera) தெரிவித்தார். அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தனர். பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென Read More

Read More
LatestNews

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!

தற்போது நடைமுறையிலுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்கள் இருப்பதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Read More