#Health Ministry

LatestNewsTOP STORIES

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன, நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் இராஜினாமா!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். மஹிந்த ராஜபக்சவை தொடர்ந்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அவசர அறிவித்தல்!!

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு உதவ சுகாதார அமைச்சு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இதன்படி, மருந்துகளைப் பெறுவது தொடர்பான புகார்கள் மற்றும் சிக்கல்களை 1999 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை தற்போது கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளமை Read More

Read More
LatestNewsTOP STORIES

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

இதுவரையில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக சுகாதார அமைச்சில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சன்ன Read More

Read More
LatestNewsTOP STORIES

மீண்டும் அமுல்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறை….. மறுபடியும் படையெடுக்கும் கொரோனா!!

இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறையாகும் வகையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardana )அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையிலேயே, மீண்டும் குறித்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ள சுகாதார Read More

Read More
LatestNewsTOP STORIES

முகக்கவசம் குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல!!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். இதன்படி, முகக்கவசம் அவசியமில்லை என்ற தீர்மானம் கடந்த 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் , இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக Read More

Read More
LatestNewsTOP STORIES

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, எதிர்காலத்தில் நான்காம்கட்ட தடுப்பூசி….. புதிய சுகாதார அமைச்சர்!!

எதிர்வரும் காலத்தில் கொவிட் – 19 நான்காம் கட்ட தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.   நேற்று புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின், செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.   இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.   எனினும், பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முக கவசம் Read More

Read More
LatestNewsTOP STORIES

நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் இன்று முடிவு!!

சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில், இன்று அதன் நிறைவேற்றுக் குழு ஆராயவுள்ளது. இருப்பினும், சுகாதார அமைச்சு இறுதியாக தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து எழுத்து மூல ஆவணத்தை தம்மிடம் கையளிக்க வேண்டும் என அதன் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அந்த ஆவணம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதேவேளை, தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை உள்ளிட்ட சுகாதார Read More

Read More
LatestNewsTOP STORIES

கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்காக அதிவிசேட வர்த்தமானி!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சரினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களில் கொரோனா தொற்றுக் குறைவடைந்திருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Read More
LatestNews

மீண்டும் பயணத்தடை/பொது முடக்கமா….. MOH வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அல்லது பயணத்தை ஒன்றிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுகாதார சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடமிருந்து நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறு முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More