#cylinder

FEATUREDLatestNewsTOP STORIES

எரிவாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் 394 விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே விநியோகம்….. Litro நிறுவனம் (முழுமையான விபரங்கள்)!!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்றைய தினத்தில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் விதம் மற்றும் பிரதேசங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் இன்று 394 விநியோகஸ்தர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். “Litro Gas Lanka Limited Distribution Plan” ஐ பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………

Read More
LatestNewsTOP STORIES

எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கிறது!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை Read More

Read More
LatestNewsWorld

நாட்டை நோக்கி விரையும் சர்வதேச கப்பல்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில் மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய (W.K.H.Vekappittiya) தெரிவித்துள்ளார். நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் விதமாக சமையல் எரிவாயு நிரப்பிய மேலும் இரண்டு சர்வதேச கப்பல்கள் டிசம்பர் மாதம் இறுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை Read More

Read More
LatestNews

வெடித்துச் சிதறி முற்றாக பற்றி எரிந்த வீடு!!

புத்தளம் – கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் சிறிய சில்லறைக் கடையுடன் கொண்ட வீடொன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது பேரப்பிள்ளைக்கு Read More

Read More
LatestNews

எரிவாயு கசிவு காரணமாக பாரிய தீ விபத்து….. 3000 கோழிகள் பலி!!

பன்னல பல்லேகமவில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3000 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
LatestNews

Laughfs Gas நிறுவனத்தின் விநியோகம் இன்று ஆரம்பம்!!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக Laughfs Gas நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிவாயு உரிய பரிந்துரைகளுக்கு அமைய விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் தொடர்ச்சியாக வெடித்து வருவதால் மக்கள் தற்போது எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை குறைத்து விறகை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

இன்று முதல் சந்தைக்கு வருகிறது எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட கொள்கலன்கள்!!

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட கொள்கலன்கள் இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா (Jayantha d Silva) தெரிவித்துள்ளார். இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும், பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு Read More

Read More
LatestNews

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிபபு!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறை மற்றும் தனியார் வீடொன்று உட்பட இன்று காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு வெடித்துள்ளது. எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல் துன்னாலை வடக்கு அமிர்தலிங்கம் பவநந்தினி என்பவரின் வீட்டிலும் காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
LatestNews

மட்டக்களப்பில் சிகிச்சை நிலையத்தில் வெடிப்பு சம்பவம்!!

மட்டக்களப்பு அரசடியில் இடம்பெற்ற எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று மாலை 7 மணியவில் சிகிச்சை நிலையத்தை மூடிச் சென்றபின் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாராணைகளில் தெரியவந்துள்ளது. இயங்குநிலையில் இல்லாத எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக 3 தண்ணீர் மோட்டர் இயந்திரம் மற்றும் குறித்த அறையின் கதவு உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

Cylinder வெடிப்பு விபத்தில் சிக்கிய பெண் இரு வாரங்களுக்குப் பின் மரணம்!!

சமையல் எரிவாயு விபத்து காரணமாக தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் திகதி சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்க முயற்சித்த போது உடலில் தீப்பிடித்துள்ளது. கடும் தீக்காயங்களுக்கு உள்ளான பெண், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் Read More

Read More