எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்….. சினோபெக்கின் விலைகள் வெளியீடு!!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) நிறுவனமும் தமது திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (01) முதல் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லீட்டருக்கு சினோபெக்கினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளாவன, 92 ரக பெட்ரோல்  – 363 ரூபாய் ஓட்டோ டீசல்         –  355 ரூபாய் 95 ரக பெட்ரோல்  –  464 ரூபாய் சூப்பர் டீசல்  Read More

Read more

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள்….. ஆரம்பமாகின சேவைகள்!!

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா(Sinopec) தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம் கொழும்பு – மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(30/08/2023) தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு தலா 03 ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக்(Sinopec), அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்(United Petrole   Read More

Read more

வீட்டு கிணறு ஒன்றினுள் இருந்து பெட்ரோல் ஊற்று….. குறித்த பகுதியில் விசேட ஆய்வில் நிபுணர் குழு!!

வீடொன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெட்ரோல் ஊற்றெடுப்பது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் உள்ள சுகுமாரன் என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றில் இருந்தே தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது. இவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுள்ளது. அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கிலிருந்து கசிந்து இந்த கிணற்றில் ஊற்றெடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து வீட்டிற்கு வந்த எரிபொருள் நிலைய Read More

Read more

குறைவடையும் எரிபொருளின் விலை – மின் கட்டணத்தில் சலுகை

இலங்கையில் தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை சற்று குறைவடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் எரிபொருள் விநியோகத்துறையில் இணையும் சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதோடு , விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.   நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ள விநியோக்கத்தர்களுக்கு கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் நிரப்பு Read More

Read more

எதிர்வரும் சில நாட்களில் இந்திய நிறுவனங்கள் வசமாகவுள்ள….. தற்போது செயல்நிலையிலுள்ள 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

இலங்கையில் அரசு வசம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 ஐ உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என பிரபல தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள 1197 அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 நிலையங்கள் தற்போது இவ்வாறான சேவைகளை வழங்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டமை இதில் குறிப்பிடத்தக்கது. மேலும், 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு Read More

Read more

எரிபொருளின் புதிய விலை இன்று பிற்பகல் அறிவிக்கப்படலாம்!!

எரிபொருள் விலை இன்று(15/08/2022) குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார். குறித்த அறிவிப்பின் படி, இந்த மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், எரிபொருள் விலையில் Read More

Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பில் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவித்தல்

எரிபொருள் விநியோகம் எரிபொருள் விநியோகத்தின் போது இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் உரிமத்தின் கியூ.ஆர் இலக்கத்திற்கு புறம்பான வகையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகள் குறித்து இவ்வாறு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைஇன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. கியூ ஆர் முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக Read More

Read more

இன்று சனிக்கிழமை எரிபொருளை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்….. முழுமையான விபரம் வெளியீடு!!

எரிபொருள் விநியோகம் வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை (30/07) எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் உந்துருளிக்கு 4 லீட்டர், முச்சக்கர வண்டிக்கு 5 லீட்டர் , ஏனைய வாகனங்களுக்கு 20 லீட்டருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0-1 அல்லது 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், கடைசி எண்கள் 3-4-5 ஆக இருந்தால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கடைசி எண்கள் 6-7-8-9 ஆகவும் இருந்தால் Read More

Read more

யாழில் ஒரு மூட்டை நெல் கொடுத்து – 6 லீற்றர் பெற்றோல் வாங்கி….. அதில் 02 லீற்றர் ஐ பிறந்தநாளுக்கு பரிசளித்த பல்கலைக்கழக மாணவி!!

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்ததினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள். அப்போதே, குறித்த மாணவி நெல்லு கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார். யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் Read More

Read more

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் வீழ்ச்சி….. இலங்கையில் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 120 ரூபாரூபாவிற்கு வழங்க முடியும்!!

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை அதிகளவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டுமெனவும் இதனால் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.   உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை, நாளொன்றுக்கு Read More

Read more