புகையிரத தாமதம் ஏற்படலாம்: இலங்கை புகையிரத திணைக்களம்

இலங்கை புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், பிரதான பாதையில் புகையிரதம் தாமதம் ஏற்படலாம் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இத்தாமத நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், வயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையிலான பகுதியிலேயே இப்புகையிரதத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

Read more

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள்….. ஆரம்பமாகின சேவைகள்!!

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா(Sinopec) தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம் கொழும்பு – மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(30/08/2023) தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு தலா 03 ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக்(Sinopec), அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்(United Petrole   Read More

Read more

வடக்கின் முன்னணி பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் உள்ள பிரபல பாடசாலைகள் சில பாடசாலை மின்சார கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஈடு செய்வதற்காக மாணவர்களிடம் பணம் Read More

Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் – இன்றிலிருந்து ஆரம்பமாகும் நடவடிக்கை

விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “நெல் விவசாயிகளுக்கு நிர்ணய விலை இல்லை என நான் எல்லா இடங்களிலும் கூறுகின்றேன். விவசாயிகளுக்கு அதிக நீதி கிடைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அமைச்சரவையிலும் விவாதித்தேன். அதற்காக பல அமைச்சரவை பத்திரங்களை Read More

Read more

இலகு முறையில் கடவுச்சீட்டு….. இன்று முதல் புதிய நடைமுறை!!

கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். பிரதேச செயலகங்களில் செயற்படும் ஆட்பதிவு திணைக்களத்தில் Read More

Read more

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!!

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதிக திட்டங்கள் தொடர்பான துறை சார் மேற்பார்வை குழுவின் சமீபத்திய கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது, பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்தில்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன எனவும், அந்நிய செலவாணி நெருக்கடி காரணமாக சுமார் 4000 பொருள்களை Read More

Read more

குறைவடையும் கையடக்க தொலைபேசி விலைகள்!!

கையடக்க தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத், ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, தற்போதுள்ள தொலைபேசிகளின் கையிருப்பு முடிந்தவுடன் இறக்குமதி செய்யப்படும் புதிய தொலைபேசிகள் ஊடக மக்களுக்கு பலன் வழங்கப்படும் என்றும் Read More

Read more

கிணற்றில் விழுந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி புன்னைநீராவி கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்து. இதில் க.பொ.த உயர்தரத்தில் பயிலும் பாவலன் பானுசா (வயது 18)என்ற மாணவியை உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .      

Read more

துருக்கியில் ஹிட்லர் மீசை வரைந்த சிறுவன் சிறையில் அடைப்பு

துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் அதிபர் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தென்கிழக்கு நகரமான மெர்சினைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் ஒப்பட்டப்பட்டிருந்த எர்டோகனின் புகைப்படம் இருந்த சுவரொட்டியில் அவரது படத்திற்கு ஹிட்லர் மீசை வரைந்ததாகக் கூறப்படுகிறது. ஹிட்லர் மீசை வரைந்து Read More

Read more

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்..! வெளியாகிய அறிவிப்பு

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது. ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சுகாதார துறை விஞ்ஞான, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் Read More

Read more