எதிர்வரும் சில நாட்களில் இந்திய நிறுவனங்கள் வசமாகவுள்ள….. தற்போது செயல்நிலையிலுள்ள 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

இலங்கையில் அரசு வசம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 ஐ உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என பிரபல தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 1197 அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 நிலையங்கள் தற்போது இவ்வாறான சேவைகளை வழங்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டமை இதில் குறிப்பிடத்தக்கது.

மேலும்,

150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், சேமிக்கவும் மற்றும் விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளது.​​

தற்போது செயல்படும் 450 நிரப்பு நிலையங்களும் இதற்காக ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் மூன்று நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம்(Bharat Petroleum), ஷெல்(Shell Petroleum) மற்றும் செனோபெக்(Sinopec petroleum) ஆகியவை இந்த நாட்டில் முதலீடு செய்ய வரக்கூடும் என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *