அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாழ் இளைஞனுடையது….. முழுமையான விபரங்கள்!!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட யாழ். இளைஞனின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று(05/11/2023) மதியம் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றிருந்ததாகவும் இந்தநிலையிலேயே இன்றையதினம்(06/11/2023) குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்படுகின்றது. முகத்திலும் உடலிலும் அடிகாயங்களுடன்….. வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்!!

Read more

வெள்ளவத்தை கடற்கரையில் தலையின்றி சடலம் கரையொதுக்கம்!!

கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

தொடர்ந்து கொழும்பு கடற்பகுதியில் படையெடுக்கும் முதலைகள்!!

காலி முகத்திடல் கடற்பகுதியில் நேற்றைய தினம் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றாம் திகதி தெஹிவளை, தொடருந்து நிலையத்திற்கு அருகில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். எவ்வாறாயினும், தெஹிவளை கடற்பகுதியில் பிரவேசித்த முதலை இன்னும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்படவில்லை. மேலும், இந்நிலையில், காலி முகத்திடலில் நேற்றைய தினம் அவதானிக்கப்பட்ட முதலை சிறிய அளவுடையது எனவும், Read More

Read more