கிணற்றில் விழுந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி புன்னைநீராவி கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்து. இதில் க.பொ.த உயர்தரத்தில் பயிலும் பாவலன் பானுசா (வயது 18)என்ற மாணவியை உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .      

Read more

உறவினர்களுடன் சென்ற மாணவனுக்கு நடந்த அவலம்!

கும்புக்கன் ஓயாவில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு பொசன் போயா தினத்தன்று உயிரிழந்துள்ளார். மொனராகலை றோயல் தேசிய பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திரந்த டில்ஷான் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் உறவினர்களுடனும் குடும்பத்தினருடன் கும்புக்கன் ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளனர். நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது, ​​மாணவர் திடீரென நீரில் மூழ்கி Read More

Read more

மர்மமான முறையில் உயிரிழந்த தாயும் மகனும்! கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Read more