#Tamil News

FEATUREDLatestNewsTOP STORIES

விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழப்பு….. கொள்கலன் சாரதி கைது!!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கொள்கலன் ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதி விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட நால்வர் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம்….. ஒதுக்கப்பட்டது பணம்!!

அதிபர் தேர்தலை இந்த வருடத்தில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் பதினெட்டாம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அதிபர் தேர்தலை ஆணைக்குழு நடத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குத் தேவையான பணத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையின்படி, பட்ஜெட்டில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். அதிபர் தேர்தலை நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அரசாங்கம் பெறுமதிசேர் வரியை அதிகரித்துள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக வெதுப்பக தொழிற்துறையினரும், வெதுப்பக உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு….. விவசாய அமைச்சு விளக்கம்!!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார். நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயற்பாடுகளே சந்தையில் கீரி சம்பாவுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் இருக்கின்றபோதும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை பதுக்கி வைத்துள்ளனர். மேலும், அவற்றை சந்தைக்கு Read More

Read More
FEATUREDLatestNews

இலங்கை மக்களுக்கு கிடைக்கும் 700 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டம்…!

உலக வங்கி இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி உதவியாக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்துள்ளது. குறித்த நிதியில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு செலவு திட்ட உதவிக்காகவும் எஞ்சிய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நலன்புரி உதவிக்காகவும் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட அணுகுமுறையின் மூலம், உலக வங்கி குழுவின் மூலோபாயம் ஆரம்பகால பொருளாதார ஸ்திரப்படுத்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என உலக Read More

Read More
FEATUREDLatestNews

கோரவிபத்தில் சிக்கி சிதறுண்டது அம்புலன்ஸ்

பண்டாரவளை பதுளை வீதியின் தோவ பிரதேசத்தில் அம்புலன்ஸ் வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் சாரதி படுகாயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். டிப்பர் ரக வாகனம் மோதியதில் அம்புலன்ஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அதில் இரு நோயாளிகள் இருந்ததாகவும், எனினும் நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். அம்புலன்ஸில் இருந்த உதவி சாரதி மற்றும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர். தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு Read More

Read More
FEATUREDLatestNews

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் – இன்றிலிருந்து ஆரம்பமாகும் நடவடிக்கை

விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “நெல் விவசாயிகளுக்கு நிர்ணய விலை இல்லை என நான் எல்லா இடங்களிலும் கூறுகின்றேன். விவசாயிகளுக்கு அதிக நீதி கிடைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அமைச்சரவையிலும் விவாதித்தேன். அதற்காக பல அமைச்சரவை பத்திரங்களை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கல்வியை கைவிட்டவர்களுக்கு இலவச தொழில்….. சிறிலங்காவில் புதிய திட்டம்!!

பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல காரணங்களால் பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்ட மாணவர்களுக்கு இலவச தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன பணித்துள்ளார். நேற்று(19/06/2023) திங்கட்கிழமை கொழும்பு மகரகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு காரணங்களால் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்ட சிறுவர்கள் குறித்து முறையான அறிக்கை ஒன்றை தயாரித்து இலவச Read More

Read More
FEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

விராட் கோலியின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்புக்கள் மற்றும் அவரது வருமானங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலிக்கு தனி இடம் உண்டு. இன்ஸ்டாகிராமில் மட்டும் விராட் கோலியை 253 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள விராட் கோலி இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 7 கோடியை ஊதியமாக பெறுகிறார். அதே சமயத்தில், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இடியுடன் கூடிய கன மழை – பலத்த காற்று….. பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Read More

Read More