23 பேருடன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது பேருந்து!!

பன்விலை ஆடை தொழிற்சாலைக்கு 20 பெண்கள் உட்பட 23 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று(20/01/2023) அதிகாலை விபத்துக்குள்ளானதாக பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மடுல்கலை ஆடை தொழிற்சாலைக்கு உனனகலை பகுதியிலிருந்து பெண்களை ஏற்றிச் சென்றபோதே குறி்த்த குடைசாய்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாரதி உட்பட எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லையென்றும், அவர்கள் அனைவரும் மடுல்கலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கை!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா தெரிவித்தார். குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் 8 ஆம் திகதி (08-07-2022) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக O+ மற்றும் Read More

Read more

கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி….. கணவர் தலையில் கட்டையால் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி – யாழில் சம்பவம்!!

  கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.   இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து கணவர் 05 லிற்றர் பெட்ரோலினை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.   இந்நிலையில், மனைவி வீட்டிற்கு அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரியை வரவழைத்து கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினை அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.   Read More

Read more

28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்கள் சீனாவின் அன்பளிப்பின்பேரில் நாட்டை வந்தடைந்தன!!

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.   14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.   ஹொங்கொங்கில் இருந்து பி – 747 என்ற விமானத்தினூடாக இந்த மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.   அதனை இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்ததாக Read More

Read more

சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் பல பிரபல வைத்தியர்கள் சிக்கினர்!!

இரண்டு மருத்துவர்கள் சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்கங்கள் தொடர்பான சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த மருத்துவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சபையின் ஆவண காப்பக அதிகாரி மருத்துவ ஆனந்த ஹபுகொட தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொண்டுள்ள இரண்டு மருத்துவர்கள் சிறு நீரக விற்பனை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு Read More

Read more

சர்வதேச தாதியர் தினம்(May 12) இன்றாகும்!!

சுகாதார சேவையின் மகத்துவம் அன்றும் இன்றும் மிக முக்கிய சேவையாக காணப்படுகின்றது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) அறிமுகப்படுத்திய தாதிச் சேவை உலக உயிர்வாழ்விற்கான இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளமையே அதற்கான காரணமாகும். நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த Florence Nightingale-இன் பிறந்த நாளான மே 12ஆம் நாளை சிறப்பாக நினைவுகூரும் வகையில் இன்றைய நாளில் சர்வதேச தாதியர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 1899ஆம் ஆண்டில் சர்வதேச தாதியர்களுக்கான பேரவை எடுத்த தீர்மானத்திற்கமைவாக ஆண்டு தோறும் Read More

Read more

யாழ் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக திருடி வந்தவர் கைது!!

யாழ்பபாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக தொலைபேசிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து பெறுமதிவாய்ந்த 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மானிப்பாய் சாவற்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட நாள்களாக ஊழியர்கள், நோயாளிகளின் தொலைபேசிகள் திருட்டுப்போயிருந்தன. கதைத்துவிட்டுத் தருவதாக தெரிவித்துவிட்டு அபகரித்துச் செல்வது, நோயாளிகள் மலசல கூடங்களுக்கு செல்லும் போது என தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றன. Read More

Read more

தென்னிலங்கையில் வெடித்த கலவரம்….. 7 பேர் உயிரிழப்பு – வெளிவரும் பகீர் தகவல்கள்!!

நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   Read More

Read more

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு….. மூவர் படுகாயம்!!

நிட்டம்புவ பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மூவர் காயமடைந்துள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வாகனத்தை Read More

Read more

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்று சிகிச்சை அளிக்க மறுத்தது பிரபல தனியார் வைத்தியசாலை….. உறுதிப்படுத்தினார் குறித்த வைத்தியசாலையின் மருத்துவர்!!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்றைதினம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை மருத்துவர் பேராசிரியர் ரணில் ஜயவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு காரணமான அமைச்சர்கள் பங்குபற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாக அமைச்சர் ரணதுங்கவை கலாநிதி ஜெயவர்த்தன பார்வையிட மறுத்ததாக சமூக ஊடகங்கள் தெரிவித்தன. ஊடக நிறுவனமொன்றுக்கு தொலைபேசி ஊடாகப் பேசிய பேராசிரியர் ஜெயவர்தன இந்த ஊடகச் செய்திகளை உறுதிப்படுத்தியதுடன் எந்தவொரு நோயாளியையும் பார்க்கவோ அல்லது Read More

Read more