கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த அறிவித்தலை ஆணைக்குழுவின் பணிப்பாளர் இன்று(12/02/2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு,
தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் இல்லாத சிம் அட்டைகளை தொலைதொடர்பு சங்கத்திற்கு தொடர்பு கொண்டு துண்டித்துக் கொள்ளலாம்.
அதேவேளை,
தெரியாமல் ஏனும் தங்கள் பெயரில் வேறு யாராவது சிம் அட்டைகளை பயன்படுத்தினால் அதனையும் உடனடியாக துண்டிக்குமாறு பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்,
உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால் அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.