சுன்னாகத்தில் போதையில் 20 வயது தங்கையை வன்புணர்வு….. குரல் பதிவில் நண்பிக்கு நடந்தவற்றை அனுப்பிவிட்டு உயிரை மாய்த்த யுவதி!!

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் உயரை மாய்த்துள்ளார்.

சுன்னாகம் காவல்துறை பிரிவில் வசிக்கும் 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இது குறித்து மூத்த சகோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு,

வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை

இளவயதினர் இடையே அதிகரித்துள்ளதனால் பல்வேறு சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *