கொட்டித்தீர்க்கப்போகும் மழை….. வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு!!
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம்(15/04/2024) 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு,
மேல், சப்ரகமுவ, ஊவா,தென் மாகாணங்களிலும் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் நாளை மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.