#Increase

LatestNews

நாட்டில் உரதட்டுப்பாட்டின் எதிரொலி!!

உரத் தட்டுப்பாடு காரணமாக, ஒட்டுமொத்த நாட்டிலும் மரக்கறிகள் உள்ளிட்ட பிற பயிர்ச் செய்கையில் இருந்து விவசாயிகள் விலகிச் செல்வதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். பொருளாதார மையங்களுக்கு மரக்கறி வரத்து குறைந்துள்ளதால் மரக்கறிகளின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2.5 மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைத்திருந்த நிலையில், தற்போது மரக்கறிகளின் இருப்பு 300,000 கிலோவாக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் மழை அதிகரிப்பால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் Read More

Read More
LatestNews

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்து செல்லும் அரிசியின் விலை!!

காணப்படுவதாக புறக்கோட்டை சந்தையை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த காலங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதோடு, அரிசி தட்டுப்பாடு காரணமாக அது நீக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்திருந்தது. இருப்பினும், சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கமைய, புறக்கோட்டை Read More

Read More
LatestNews

நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோகிராம் சீனி சுமார் 200 ரூபாய் உட்பட பல்வேறு விலைகளில் விற்பனை…. மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!!

இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் சில நாட்களாக சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் சீனி சுமார் 200 ரூபாய் உட்பட பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், நாட்டுக்கு தேவையான அளவு சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்றும் நாளையும் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் Read More

Read More
LatestNews

என்றுமில்லாதளவில் நாட்டில் சீனிக்கு தட்டுப்படு!!

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நடைமுறைப்படுத்திய போதிலும் நாட்டில் வெள்ளைச்சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஒரு கிலோ வெள்ளை சீனி 170 ரூபா வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. வெள்ளை சீனி தற்போது களஞ்சியசாலைகளில் இல்லையென இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பில் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுக்கும்(Lacanta aḻakiyavaṇṇa) சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையே நாளையதினம் Read More

Read More
LatestNews

அடுத்த ஒரு மாதத்திற்குள் எரிபொருள், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளது…. ஹர்ஷன ராஜகருண!!

தற்போது கோதுமை மாவு, எரிவாயு , பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகள் உயர்ந்த நிலையில் இதுவரை உயர்த்தப்படாத அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஒரு மாதத்திற்குள் எரிபொருள், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் தேர்தலை நடத்தும் முடிவு Read More

Read More
LatestNews

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல்!!

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எனினும், அமைச்சரவையின் அனுமதிக்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும். மேலும், அரிசி மற்றும் குழந்தை பால் மாவின் விலையை உயர்த்த வேண்டாம் என்று வாழ்க்கைச் செலவுக் குழு முடிவு செய்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோவுக்கு ரூ .200, கோதுமை மாவுக்கு ரூ .10 Read More

Read More
LatestNews

மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை…. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண!!

அரிசி, சீனி, பால் மாவு மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று கூறினார். தற்போது, அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். எனினும் “இது தொடர்பாக நாங்கள் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை,” என்றும் அவர் கூறினார். விநியோகச் சிக்கல்கள், இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு டொலர் பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு Read More

Read More
LatestNews

1Kg பால்மா விலையினை 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும்…. இறக்குமதியாளர்கள் சங்கம்!!

பால்மாக்களின் விலையினை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வாழ்க்கை செலவு பற்றிய குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது. எனினும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையினை 200 ரூபாயில் உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி அமைச்சு கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். சர்வதேச சந்தையில் பால்மாக்களின்  விலை Read More

Read More
LatestNews

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கப்படடது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை!!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை விபரங்கள், சிவப்பு பருப்பு Read More

Read More
LatestNews

அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிப்பு!!

நாட்டில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பாண் 5 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி பொருட்கள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு கிலோ கிராம் கேக் 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Read More