புதிய அரசுடன் பேசி நிறைவேற்று அதிகார முறையை நீக்க தயார்….. விசேட உரையில் ஜனாதிபதி – முழுமையான விபரங்கள், காணொளி!!

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தான் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

 

இன்றிரவு 9 மணிக்கு வெளியிட்ட விசேட அறிவிப்பில் இதனைக் கூறியுள்ளார்.

 

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

 

“19ஆவது திருத்தம் விரைவில் வலுப்படுத்தப்படும். நாடு வழமைக்கு மாறிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையையும் நியமிக்க முடியும்.

நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் அளித்து,

19 ஆவது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில்,

ரசியலமைப்பில் புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் நாட்டை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அனைவருடனும் கலந்துரையாடி அதனை நோக்கி செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் .

இந்த இக்கட்டான தருணத்தில் நாடு வீழ்ச்சியடையாமல், மக்களின் உயிரையும், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பதற்கும்

மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அனைத்தையும் வழங்குவதற்கும் அரச இயந்திரத்தை தொடர்ந்து செயல்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்“ என்றார்.

 

எனவே,

இந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்து இலங்கையர்களும் அமைதியாகவும் விவேகமாகவும் செயற்படுமாறு அரச தலைவர் மேலும் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *