ஹெரோயினை ஊசி மூலம் பயன்படுத்திய 10 வயது சிறுவன் கைது….. யாழ் – வடமராட்சி பகுதியில் சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் நேற்று(03/05/2023) சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். வடமராட்சிதுன்னாலையைச் சேர்ந்த சிறுவனே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

குறித்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்  உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோயினை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஹெரோயினை ஊசி மூலம் குறித்த சிறுவன் பயன்படுத்திய நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *