#Tamil News

FEATUREDLatestNewsTOP STORIES

வவுனியா கன்னாட்டி பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்….. தாயும் மகளும் உடல் நசுங்கி பலி!!

வவுனியா – கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது 9 வயதான மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று(16/06/2023) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலகு முறையில் கடவுச்சீட்டு….. இன்று முதல் புதிய நடைமுறை!!

கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். பிரதேச செயலகங்களில் செயற்படும் ஆட்பதிவு திணைக்களத்தில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!!

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதிக திட்டங்கள் தொடர்பான துறை சார் மேற்பார்வை குழுவின் சமீபத்திய கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது, பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்தில்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன எனவும், அந்நிய செலவாணி நெருக்கடி காரணமாக சுமார் 4000 பொருள்களை Read More

Read More
FEATUREDLatestNews

சென்னை – காங்கேசன்துறை கப்பல் சேவை – முதற்கட்டமாக யாழ்ப்பாணம் வரவுள்ள கப்பல்

எதிர்வரும் 17 ஆம் திகதி சென்னையில் இருந்து கப்பலொன்று காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலை வரவேற்பதற்காக துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்ட பரீட்சார்த்தமாகவே குறித்த கப்பல் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் நாளை மறுதினம் கப்பல் துறை அமைச்சர் Read More

Read More
FEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

குறைவடையும் கையடக்க தொலைபேசி விலைகள்!!

கையடக்க தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத், ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, தற்போதுள்ள தொலைபேசிகளின் கையிருப்பு முடிந்தவுடன் இறக்குமதி செய்யப்படும் புதிய தொலைபேசிகள் ஊடக மக்களுக்கு பலன் வழங்கப்படும் என்றும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள்….. விலை விபரம் உள்ளே!!

10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு நாளை தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 01. காய்ந்த மிளகாய் 1 கிலோ ரூ. 1290.00 02. சிவப்பு பருப்பு 1 கிலோ ரூ. 299.00 03. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வெளியாகவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

துருக்கியில் ஹிட்லர் மீசை வரைந்த சிறுவன் சிறையில் அடைப்பு

துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் அதிபர் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தென்கிழக்கு நகரமான மெர்சினைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் ஒப்பட்டப்பட்டிருந்த எர்டோகனின் புகைப்படம் இருந்த சுவரொட்டியில் அவரது படத்திற்கு ஹிட்லர் மீசை வரைந்ததாகக் கூறப்படுகிறது. ஹிட்லர் மீசை வரைந்து Read More

Read More
FEATUREDLatestNews

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்..! வெளியாகிய அறிவிப்பு

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது. ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சுகாதார துறை விஞ்ஞான, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் Read More

Read More
FEATUREDLatestNews

தமிழர் பகுதியில் கோர விபத்து..! சம்பவ இடத்தில் இருவர் பலி

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் சொகுசு வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன காவல் துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(6) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற சொகுசு வாகனம் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் சொகுசு வாகனத்தில் பயணித்த கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர். கனரக Read More

Read More