கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு….. விவசாய அமைச்சு விளக்கம்!!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயற்பாடுகளே சந்தையில் கீரி சம்பாவுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் இருக்கின்றபோதும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை பதுக்கி வைத்துள்ளனர்.

மேலும்,

அவற்றை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அதன் காரணமாகவே கீரி சம்பாவிற்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இது அரிசி மாபியாக்களினால் செயற்படுத்தப்படும் செயற்கை தட்டுப்பாடு.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *