தனக்குத் தானே தீ வைத்த 19 வயது மாணவி !!

மாணவி ஒருவரை சகோதரன் எச்சரித்ததால் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கண்டி, கலஹா பிரதேசத்தில் நேற்றிரவு பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளார். காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் இவர் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் இரகசியமாக கைப்பேசி ஒன்றை பயன்படுத்தியுள்ள நிலையில், கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு மாணவியின் சகோதரன் அது குறித்து எச்சரித்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அவரது வீட்டின் குளியலறையில் மாணவி Read More

Read more

மகாவலி ஆற்றில் குதித்த இளைஞனும் யுவதியும்….. நீந்தி கரைசேர்ந்த இளைஞன் – யுவதி மாயம்!!

மகாவலி ஆற்றில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தெரியவருகையில், பதுளை மாவட்டம் மஹியங்கனை பாலத்தில் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர். இருப்பினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரை சேர்ந்ததையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அப்பகுதி மக்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மஹியங்கனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து Read More

Read more

யாழில் இளைஞன் தற்கொலை!!

யாழ் இந்துக்கல்லுாரி பழைய மாணவன் அமிர்தலிங்கம் அகிலன் எனும் 31 வயதான ஜிம்னாஸ்டிக் வீரர் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். NDB வங்கி ஒன்றின் உத்தியோகத்தராக கடமையாற்றுபவராகவும் மிகவும் நட்புடன் அனைவருடன் பழகும் இவர் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். தற்கொலைக்கு முன்னைய தினமும் கொக்குவில் இந்துக்கல்லுாரியில் தான் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதன் பின்னரே அவர் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான இவரின் இழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,

Read more

பளை பொலிஸ் பிரிவில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். கரந்தாய் பளையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று 12 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

Read more

Online Video Game இற்கு அடிமையான சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

15 வயது சிறுவன் ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையானதால் அவனது பெற்றோர் சிறுவனிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்ததால் விபரீத முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளான். மாத்தறை ரொட்டும்பா பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான். இப்பகுதியில் உள்ள பல சிறுவர்கள் ஒரு குறிப்பிட்ட ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் வழியாக நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக சிறுவர்கள் மொபைல் Read More

Read more

இன்று மீண்டும் 16 ஈழத் தமிழர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமில் 16 ஈழத் தமிழர்கள் கூட்டாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி வயிற்றை கிழித்தும், கழுத்தை அறுத்தும் இலங்கை அகதிகள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள விசேட முகாமில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 இற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள், கொரோனா தொற்றுப் பரவல் Read More

Read more

ஒன்லைன் கல்விக்கு ஏற்ற ‘ஸ்மார்ட் போன்’ இல்லை – தவறான முடிவெடுத்த மாணவன் – சோகத்தில் குடும்பம்!!

ஒன்லைன் மூலம் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கு ஏற்ற ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் வாரியபொல பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வாரியபொல காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரியபொல புறநகரில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் கவிந்து தில்ஹான் கேஷரா விஜேரத்ன என்ற 10 ஆம் வகுப்பு மாணவனே கடந்த (16) ஆம் திகதி தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வாரியபொல Read More

Read more

யாழில் தவறான முடிவெடுத்து இருவர் உயிரிழப்பு!!!!

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் அவர், நிதி Read More

Read more

காதலை ஏற்காததால் தற்கொலை செய்த இளைஞர்: அனிகா சுரேந்திரன் கூறிய பகீர் உண்மை!!

நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ள பகீர் விடயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பின்னர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இவரது அதிகப்படியான நடிப்பு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி குட்டி Read More

Read more