மொபைல் கேமால் தூக்கிட்டு தற்கொலை செய்த வயது சிறுவன்!!

அநுராதபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவன் ஒருவன் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த பெற்றோர் மறுத்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியின் ஏழாம் தர மாணவர் என அடையா ளம் காணப்பட்டுள்ளார். இணையம் ஊடாக கற்றலின் போது தாயாரின் கைத்தொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவன் “Game” விளையாட்டில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. கைத்தொலைபேசியில் “Game” விளையாடும் பழக்கம் கொண்ட குறித்த மாணவன் கடந்த 11ஆம் திகதி பாடசாலையைத் தவறவிட்டதால் அவரது தாயார் மாணவனைத் திட்டிவிட்டு, Read More

Read more

தனக்கு தானே தீ வைத்த கர்ப்பிணி பெண்….. வடமராட்சி மண்டானில் சம்பவம்!!

வடமராடசியில் உள்ள மண்டன் என்னும் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீவுப்பகுதியை சேர்ந்த குறித்த பெண்  மண்டான் பகுதியில்  அமைந்துள்ள தனது கணவரின் வீட்டிற்கு வருகைதந்து அங்கே ஏற்படட பிரச்னை காரணமாக, காலை 11.00 மணியளவில் வீட்டில் இருந்த மண்ணெய்யை தன்மேல் ஊற்றி வயிற்றில் கருவுடன் இருந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

அவுஸ்திரேலியாவில் இரு குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த இலங்கையர் (புகைப்படங்கள்)!!

தனது இரு குழந்தைகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட நபர் இலங்கையர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினரை மேற்கோள்காட்டி அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய காவல்துறையினர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இந்திக்க குணதிலக்க (வயது – 40) என்ற நபரே இவ்வாறு தற்கொலை  செய்துகொண்டுள்ளார். சம்பவத்தில் 4 வயதான மகளும், 6 Read More

Read more

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி வவுனியாவில் தூக்கில் தொங்கி மரணம் (புகைப்படம்)!!

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்த போது குறித்த இளம் யுவதி வீட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக குறித்த யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதும் Read More

Read more

தனக்குத் தானே தீ வைத்த 19 வயது மாணவி !!

மாணவி ஒருவரை சகோதரன் எச்சரித்ததால் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கண்டி, கலஹா பிரதேசத்தில் நேற்றிரவு பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளார். காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் இவர் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் இரகசியமாக கைப்பேசி ஒன்றை பயன்படுத்தியுள்ள நிலையில், கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு மாணவியின் சகோதரன் அது குறித்து எச்சரித்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அவரது வீட்டின் குளியலறையில் மாணவி Read More

Read more

மகாவலி ஆற்றில் குதித்த இளைஞனும் யுவதியும்….. நீந்தி கரைசேர்ந்த இளைஞன் – யுவதி மாயம்!!

மகாவலி ஆற்றில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தெரியவருகையில், பதுளை மாவட்டம் மஹியங்கனை பாலத்தில் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர். இருப்பினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரை சேர்ந்ததையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அப்பகுதி மக்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மஹியங்கனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து Read More

Read more

யாழில் இளைஞன் தற்கொலை!!

யாழ் இந்துக்கல்லுாரி பழைய மாணவன் அமிர்தலிங்கம் அகிலன் எனும் 31 வயதான ஜிம்னாஸ்டிக் வீரர் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். NDB வங்கி ஒன்றின் உத்தியோகத்தராக கடமையாற்றுபவராகவும் மிகவும் நட்புடன் அனைவருடன் பழகும் இவர் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். தற்கொலைக்கு முன்னைய தினமும் கொக்குவில் இந்துக்கல்லுாரியில் தான் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதன் பின்னரே அவர் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான இவரின் இழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,

Read more

பளை பொலிஸ் பிரிவில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். கரந்தாய் பளையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று 12 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

Read more

Online Video Game இற்கு அடிமையான சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

15 வயது சிறுவன் ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையானதால் அவனது பெற்றோர் சிறுவனிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்ததால் விபரீத முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளான். மாத்தறை ரொட்டும்பா பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான். இப்பகுதியில் உள்ள பல சிறுவர்கள் ஒரு குறிப்பிட்ட ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் வழியாக நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக சிறுவர்கள் மொபைல் Read More

Read more

இன்று மீண்டும் 16 ஈழத் தமிழர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமில் 16 ஈழத் தமிழர்கள் கூட்டாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி வயிற்றை கிழித்தும், கழுத்தை அறுத்தும் இலங்கை அகதிகள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள விசேட முகாமில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 இற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள், கொரோனா தொற்றுப் பரவல் Read More

Read more