திகுடுத்தனம் புரிந்த வர்த்தகர்……. நுகர்வோர் அதிகார சபையினரின் அதிரடி நடவாட்க்கை!!

நுவரெலியாவில் கடையொன்றில் விலையை மாற்றி அதிக விலைக்கு சொக்லேட் விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (6) இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். கடையிலிருந்த சொக்லேட்டின் விலையை வர்த்தகர் அழித்துவிட்டு தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப பேனாவால் எழுதி வைத்து விற்பனை செய்வதாக நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. நுவரெலியா நுகர்வோர் அலுவல்கள் அத்தியட்சகர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ரங்க Read More

Read more

இன்னும் 18 மாதங்களில் இலங்கையில் “கேபிள் கார்கள்”!!

கேபிள் கார் திட்டம் அடுத்த 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமான கேபிள் கார் திட்டம் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலான 4 கிலோமீற்றர் கேபிள் கார் திட்டத்திற்கு இரண்டு கட்டங்களாக நிதி வழங்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற Read More

Read more

ஆசிரியர்கள் சரமாரியாக தாக்கியதால் கவலைக்கிடமான நிலையிலுள்ள சா/தர பரீடசைக்கு தோற்றவுள்ள தமிழ் மாணவர்கள்!!

நுவரெலியா தமிழ் பாடசாலை ஒன்றில் சாதாரண தரம் பரீட்சை பெற உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் கூட்டிணைந்து தாக்கியுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் பலத்த காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல் தொடர்பாக தலவாக்கலை காவல்துறை முறைப்பாடு செய்ய சென்றவர்களுக்கு தாக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரம் தெரியாததால் திருப்பி அனுப்பப்பட்டன . மாணவர்களை தாக்கிய ஆசிரியர்களின் Read More

Read more

ஹோட்டலின் 5வது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தொழில் புரிந்து வந்த முகாமையாளர் ஒருவர் ஹோட்டலின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை நுவரெலியாவில் உள்ள பிரதான சுற்றுலா ஹோட்டலின் (Green Araliya)5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த ஹோட்டலில் முகாமையாளராக தொழில் புரிந்து வந்த கம்பளை தொலஸ்பாகே வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதான தரங்க பிரியந்த ஹெட்டியாராச்சி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சுற்றுலா ஹோட்டலின் ஊழியர்கள் Read More

Read more

வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் ஒன்று, இன்று (01) மதியம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லுசாகாகுமாரி தர்மகீர்த்தியின் உத்தரவுக்கு அமைய, நுவரெலியா பொலிஸாரால் நீதிபதி முன்னிலையில் சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. ஆறுமாதம் குறை பிரசுவத்தில் பிறந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் தனிவீடு ஒன்றில் குடும்பத்துடன் Read More

Read more

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் Read More

Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்ட பகுதிகள்!!!

4 மாவட்டங்களைச் சேர்ந்த 5 பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவு கம்பஹா மாவட்டம் ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் கொழும்பு மாவட்டம் ஒபேசேகரபுர (514சீ) கிராம சேவகர் பிரிவு நுவரெலியா மாவட்டம் கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவு ஆகிய பிரதேசங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Read more