மருந்துகளுக்கான திருத்தப்படட விலைகளுடன் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி!!

அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.   அதன்படி, 2019 ஆம் ஆண்டு அறுபது வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளிலே குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read more

கிடைத்தது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கான அங்கீகாரம்!!

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார். மேலும், கொள்கை முடிவுகளின் அடிப்படையில் இந்த அட்டை கட்டாயமாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எந்த இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் என்பதை அமைச்சு எதிர்காலத்தில் முடிவு செய்யும். கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மற்றும் முழுமையான தடுப்பூசி நிலைக்கான QR குறியீடு என்பன 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் Read More

Read more

முன்பள்ளிகள், தரம் 6 வரைக்குமான 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும்……

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் விரைவில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து நேற்று (15) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்பள்ளிகள், தரம் 6 வரைக்குமான 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் விரைவில் திறப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சகம் இறுதி செய்து வருகிறது. அதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பாடசாலைகளை திறப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் சுகாதார Read More

Read more

கொரோனா தொற்று உறுதியாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போது தான் நாட்டை திறக்க முடியும்…… சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவரின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், தடுப்பசி வழங்கும் செயற்பாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. விரைவில் இந்த தடுப்பூசி திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more

கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி….. பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவினரின் கண்டுபிடுப்பு!!

கொரோனா தொற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு விரைவான ஆன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முறைகளே தற்போது இலங்கையில் உள்ளன. எனினும், கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் உள்ளிட்ட குழுவினர் உருவாக்கியுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்சவின் வழிகாட்டுதலில் இந்த கருவியை மூத்த  உள்ளிட்ட குழு வடிவமைத்துள்ளது. இந்த கருவி சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலிவாக கிடைப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் காணவும் உதவுகிறது. ரூபாய் Read More

Read more

எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணி வரை நீடிக்கப்பட்ட்து ஊரடங்கு உத்தரவு!!

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் மற்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் தமது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.   ஜனாதிபதியின் ஊடகசெயலாளரின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும்   எதிர்வரும் திங்கட் கிழமை  தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக Read More

Read more

13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட்து…. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்!!

ாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை உறுதிப்படுத்தினார். ஊரடங்கு சட்டம் மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.   Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும்   இந்த ஊரடங்கு காலப்பகுதியில் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்குமாறும் வீடுகளில் இருக்குமாறும் சுகாதார அமைச்சர் Read More

Read more

நீடிக்கப்பட்ட ஊடரங்குச் சட்டம் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  தீர்மானித்துள்ளார் என மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது ருவிட்டர் Read More

Read more

ஊரடங்குச் சட்டம் நீடிப்புத் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நாட்டை முடக்குவதால் எதனையும் சாதிக்கவில்லை. எனவே திங்கட்கிழமைக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என நான் கருதவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய  ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனியார் வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்துள்ளார். நாட்டைத் தொடர்ந்தும் மூடிவைப்பதா????? அல்லது சில தளர்வுகளுடன் ஊடரங்கை நீடிப்பதா???? தொடர்பில் இன்று கூடவுளடள கொவிட் 19 தடுப்புச் செயலணி தீர்மானிக்கும்.

Read more

முடங்குகிறது நாடு- வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் தற்போது கட்டுக்கடங்காது அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பபட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் Read More

Read more