#Covid19

LatestNews

வீட்டில் பராமரிக்க திட்டம்!!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ,கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமானது தற்போது ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் Read More

Read More
LatestNews

நல்லூர் திருவிழாவிற்கான வீதித் தடை விவகாரம்- யாழ்.முதல்வர் பொலிஸாரிடையே கலந்துரையாடல்!!

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட ஊடக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் யாழ்ப்பாண பொலிஸாருடன் இன்றைய தினம் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். விசேட திருவிழாக்கள் மற்றும் பூசை நேரங்களை தவிர மீதி நேரங்களில் வீதிக் கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொதுமக்களை ஆலய Read More

Read More
LatestNews

பொது முடக்கத்திற்குள்ளாகிறதா நாடு?? தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!!

நாட்டை முடக்குவது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா மற்றும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வார இறுதியில் இந்த முடக்கம் அமுலுக்கு வரலாமெனவும், இந்த முடக்கம் சுமார் ஒரு மாத காலம்வரை நீடிக்குமெனவும் சுகாதாரத் துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் தென்னிலங்கையில் இயங்கும் Read More

Read More
LatestNewsWorld

ஆபத்தான பட்டியலில் இலங்கை உள்ளிட்ட 15 நாடுகள்! கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஹாங்காங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பங்களாதேஷ், கம்போடியா, பிரான்ஸ், கிரீஸ், ஈரான், மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின், இலங்கை, சுவிட்சர்லாந்து, தான்சானியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாகளுக்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய தரவுகளின் படி, 15 நாடுகளில் இருந்து ஹாங்காங்கில் நுழையும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும், 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு Read More

Read More
LatestNews

இலங்கையில் கொரோனா மரணங்கள் உச்சம் தொட காரணம் என்ன??

கொவிட் பரவுவதை கட்டுப்படுத்த சமூகத்தில் பொது சுழற்சியை 80% முதல் 90% வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடு கொவிட் 4 ஆம் இடர் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. நாட்டின் தடுப்பூசி செயல்முறை, அறிவியல் முறையின் எல்லைக்கு வெளியே செயற்படுத்தப்பட்டமையே, மரண எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More
LatestNews

தடுப்பூசி பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆகஸ்ட் 12 வரை 146 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பெப்ரவரி 16 ஆம் திகதி தொடங்கியது. எனினும், இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாரஹேன்பிட்ட, இராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் Read More

Read More
LatestNews

மன்னாரில் கொவிட் மரணம் அதிகரிப்பு – வைத்தியர் ரி.வினோதன் தெரிவிப்பு!!

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த 9ஆம் திகதி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கீரி பகுதியைச் சேர்ந்த( 77 வயதுடைய) வயோதிபர் ஒருவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலன் இன்றி, Read More

Read More
LatestNews

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்து! சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது. எனவே சுகாதார வழிகாட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், நாட்டின் தற்போதைய நிலைமை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் . அதனை எதிர்கொள்ள மக்களை கூடிய வகையில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும். இலங்கையை பொறுத்த Read More

Read More
LatestNewsWorld

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசல்! ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!!

ஜெர்மனியின் லோவர் சாக்ஸனி மாநிலத்தில் உள்ள ப்ரைஸ்லண்ட் எனும் மாவட்டத்தில் மக்களுக்குத் தடுப்பூசிக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு உப்புக்கரைசல் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரியும் தாதி ஒருவர், தடுப்பூசிக்குப் பதில் உப்புக்கரைசல் போட்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளும்படி சுமார் 8,600 பேரிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதாக, உள்ளூர் மன்றத் தலைவர் தெரிவித்தார். உப்புக்கரைசல் பாதிப்பை ஏற்படுத்தாது. என்றாலும், Read More

Read More
LatestNews

முடங்குகிறதா இலங்கை? ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது பேசிய ஜனாதிபதி, தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் முன்னெடுக்கவும், மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற Read More

Read More