FEATUREDLatestNewsTOP STORIES

ATM அட்டை திருடி 660000 ரூபாய் கொள்ளையடித்த திருடி கைது!!

பட்டபொல பகுதியில் ATM அட்டையை திருடி 660000 ரூபாய் கொள்ளையடித்த பெண்ணொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பட்டபொல பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம்(14/03/2023) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பட்டபொல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாடு செய்தவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் எனவும் அவர் தனது தாய்க்கு அனுப்பிய பணத்தை பெற பயன்படுத்திய ATM அட்டையை சந்தேகநபர் திருடியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட பணத்தில் எடுக்கப்பட்ட மூன்று தங்க நகைகள், ஒரு தங்க வளையல் மற்றும் 35000 ரூபா பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் நேற்று(15/03/2023) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

One thought on “ATM அட்டை திருடி 660000 ரூபாய் கொள்ளையடித்த திருடி கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *