பலாலியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்ற திடத்திற்காக….. நேர்வேயின் போருட் நிறுவன அதிகாரிகள் கள விஜயம்!!

யாழ்பாணம் பலாலி பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்றங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

றகாம நிறுவனம் மற்றும் நேர்வேயை தளமாக கொண்டு இயங்கும் போருட் நிறுவனம் ஆகியன கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஆராய்ந்துள்ளன.

யாழ்ப்பாணம் பலாலியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள் குடியேற்ற வசதிகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில்

தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கான திட்ட முன்னெடுப்புக்களை யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில்,

விடுவிக்கப்பட்ட பலாலி பகுதிகளில் உள்ள மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் பார்வையிடும் வகையில் தற்காலிக வீட்டு திட்டங்களை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு றகாம நிறுவனம் மற்றும் நேர்வேயை தளமாக கொண்டு இயங்கும் போருட் நிறுவனம் இணைந்து கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்தும் முகமாகவும் மீள் குடியேற்ற மக்களின் வாழ்வதாரம் மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முகமாகவும் பிரதேச செயலகத்துடன் இணைந்து அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்கான மேற்பார்வை விஜயமாக குறித்த விஜயம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இந்த விஜயத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சிவசிறி, றகமா நிறுவன பணிப்பாளர் மரிக்கார், நேர்வே போருட் அமைப்பின் திட்ட அமைப்பாளர் அனா, பலாலி கிரமசேவகர் உட்பட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *