கடல் பகுதியில் மணல்களை அகழ பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்த கப்பல்…. மன்னாரில் கரைதட்டி ஒதுங்கியது!!

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் பாரிய கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை(07/07/20223) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை இலங்கை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கப்பல் கடல் பகுதியில் காணப்படும் மணல்களை அகழ்வதற்காக பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்ததாக காணப்படுகின்றது

கப்பலில் ஏற்பட்ட

இயந்திர கோளாறு காரணமாக கப்பல் தரை தட்டியிருக்கலாம் என ஒரு புறம் சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வாறு தரை தட்டிய கப்பலை பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *