#people

LatestNews

புதிய விகாரங்கள் கண்டுபிடிப்பு!! கொழும்பை மூடுங்கள் – அவசர கோரிக்கை!!

கொழும்பில் உள்ள மருந்தகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கனைத் தவிர அனைத்து கடைகளையும் சில நாட்களுக்கு மூடுமாறு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்வதால் கொழும்புக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் பிற சமூகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலால் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக சமூகம் தமக்கு ஏற்படும் இழப்புகளை புறக்கணித்து, தாமாக முன்வந்து கடைகளை மூடி, Read More

Read More
LatestNewsWorld

ஆபத்தான பட்டியலில் இலங்கை உள்ளிட்ட 15 நாடுகள்! கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஹாங்காங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பங்களாதேஷ், கம்போடியா, பிரான்ஸ், கிரீஸ், ஈரான், மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின், இலங்கை, சுவிட்சர்லாந்து, தான்சானியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாகளுக்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய தரவுகளின் படி, 15 நாடுகளில் இருந்து ஹாங்காங்கில் நுழையும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும், 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு Read More

Read More
LatestNewsWorld

ரஷ்ய பஸ்ஸொன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்து!!

ரஷ்யாவின் தென்மேற்கு நகரமான வோரோனேஜில் வியாழக்கிழமை மாலை பஸ்ஸொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்தி நிறுவனமான ‘TASS’ தெரிவித்துள்ளது. வெடி விபத்தின் போது பஸ்ஸில் 30இற்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகள் வெடிப்பு வாகனத்தை உள்ளே இருந்து கிழித்து, ஜன்னல்கள் மற்றும் குப்பைகள் எல்லா திசைகளிலும் பறக்க செய்ததை வெளிக்காட்டியது. வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் ஒரு பெண் இறந்தார், Read More

Read More
LatestNews

வீடுதேடி வருகிறது தடுப்பூசி – தயார் நிலையில் சிறப்பு நடமாடும் வாகனங்கள்!!

இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்று வியாழக்கிழமை (12) முதல் இராணுவத்தினால் ஆரம்பிக்கப்படுகின்றது. அதன்படி ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் Read More

Read More
LatestNews

இலங்கை எட்டிய மைல்கல்! தொடரும் அடுத்த முயற்சி!!

கொவிட் -19 தடுப்பூசி இயக்கத்தில் இலங்கை 11 மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையில் இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு (11,081,092) கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 96% க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்றுள்ளனர் அதேநேரம் 30 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் மக்கள் தொகையில் 26% க்கும் அதிகமானோர் கொவிட் -19 Read More

Read More
LatestNews

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளிவரவுள்ள முக்கிய அறிவித்தல்??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதன் பின்னர் நாட்டை முடக்குவது அல்லது பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது இன்றோ அல்லது நாளையோ சாத்தியமாகலாம் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நூறிற்கும் அதிகமாகவுள்ளதை சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், அடுத்த சில வாரங்களில் பெரும் நெருக்கடி நிலையினை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து Read More

Read More
LatestNews

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு! அரசாங்கம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன Read More

Read More
LatestNews

உடனடியாக ஊரடங்கு விதியுங்கள் – அரசாங்கத்திற்கு அவசர அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே நாட்டில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வெற்றிகரமான வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS) அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார பிரிவுகளிலும், சுகாதாரத் துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது என சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு இடமளிக்கும் Read More

Read More
LatestNews

இலங்கை மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய் -மருத்துவர்களை நாடுமாறு அறிவுறுத்தல்!!

கொரோனா தொற்றை அடுத்து இலங்கை மக்களை மற்றுமொரு நோய் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. டீனியா என்கிற ஒருவித பூஞ்சை நோயே இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது கொரோனா தொற்றுடன் நேரடியாக தொடர்புபடாத போதிலும் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவர்களை நாடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள், மிருகங்கள் என பலருக்கும் இந்த தோல் நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. விரல், தலை என பல்வேறு இடங்களிலும் தொடர் அரிப்பு நிலைமையை ஏற்படுத்தும் என்றும் Read More

Read More
indiaLatestNewsWorld

வெளிநாடுகளில் உள்ள 124 இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகி உள்ள செய்தி!!

16 நாடுகளில் தொழில்புரிந்த 124 புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய இந்த தகவலை தெரிவித்தார். எனினும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களுக்காக அவர்களின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்படும் மரண சடங்குகளுக்காக தலா 40,000 ரூபா கொடுப்பனவும், இந்த குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நட்டஈடும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, வௌிநாடுகளில் தொழில்புரியும் 4,500-க்கு மேற்பட்ட இலங்கையர்கள் Read More

Read More