#Attack

FEATUREDLatestNewsTOP STORIES

ஆசிரியரின் மோசமான தாக்குதல்….. படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!!

ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் குறித்த ஆசிரியர் தமது மகனான மாணவனை பலமுறை அடித்துள்ளதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி….. கணவர் தலையில் கட்டையால் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி – யாழில் சம்பவம்!!

  கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.   இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து கணவர் 05 லிற்றர் பெட்ரோலினை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.   இந்நிலையில், மனைவி வீட்டிற்கு அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரியை வரவழைத்து கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினை அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.   Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

6 மாத குழந்தை யானை தாக்கி மரணம்!!

யானை ஒன்றின் தாக்குதலில் 6 மாத குழந்தை ஒன்று புதன்கிழமை (08/06/2022) மாலை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிலுள்ள ஒலுவில் பள்ளக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதக் குழந்தையே இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளது. பள்ளக்காடு பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை தங்கியிருந்து செய்துவருவது வழக்கம்.   இந்நிலையில், சம்பவதினமான Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் தாக்குதல்….. மடக்கிப் பிடித்த மாணவர்கள்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை பல்கலை மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலை வளாகத்திற்குள் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நினைவேந்தல் நிகழ்விற்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி நினைவேந்தலில் பங்குகொண்டனர். நிகழ்வு முடிவுற்ற பின்னர் அங்கு நின்ற மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர்.   பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டபோது ஏனைய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சுன்னாகத்தில் எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி, சாரதி மற்றும் உதவியாளர் மீதும் கொடூர தாக்குதல்!!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி மீதும் சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளார்கள் என சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More
LatestNewsTOP STORIES

கொடூரமான சோகம் நிகழ்ந்து இன்றுடன் 03 வருடங்கள் நிறைவு!!

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சக்ரான் காசீம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் Read More

Read More
LatestNewsTOP STORIES

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்….. காணொளி!!

கெஸ்பேவயில்(Kesbewa) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் உரிமையாளருக்கும் நுகர்வோர் பலருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த நுகர்வோர் உரிமையாளரை எதிர்த்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இதற்கிடையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் தலையிட்டதால், அந்த நபருக்கும் நுகர்வோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் கிளர்ச்சியடைந்த நுகர்வோர் பலரால் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார். மோதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை உக்ரைன் மக்களுக்கு அனுப்பும் கூகுளின் புதிய அப்டேட்!!

உக்ரைனிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய வசதி ஒன்றை வழங்கியுள்ளது. இதன்படி, அண்ட்ரொய்ட்(Android) பயனாளர்களுக்கு வான்வெளித் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை கூகுள் ஆரம்பித்துள்ளது. பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உக்ரைனில் நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை அனுப்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை நம்பியே Read More

Read More
LatestNewsTOP STORIES

பெண் மாணவிகள் மோதல் – ஒருத்தி வைத்தியசாலையில்….. யாழ் பல்கலைக்கழகத்தில் சம்பவம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More
LatestNewsTOP STORIESWorld

ஏமனில் சிறைச்சாலை மீது விமானத் தாக்குதல்….. குறைந்தது 70 பேர்!!

ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 70இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடுத்துவைப்பு மையம் அல்லது சிறைக்கூடம் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது. போர்ப்பதற்றம் அதிகரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் விமானத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்த  ஐ.நா. தலைமைச் செயலாளர் Read More

Read More